பேராசிரியையை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய வங்கி அதிகாரி

 
r

ஹோட்டல் அறையில் பேராசிரியை உடன் உல்லாசமாக  இருந்த வங்கி அதிகாரி அதை வீடியோவாகவும் எடுத்து அந்த ஆபாச வீடியோவை காட்டி மிரட்டி வந்து இருக்கிறார்.  அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  

மராட்டிய மாநிலத்தின் மும்பையைச் சேர்ந்த 43 வயது பெண் அங்கே ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.  கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அவர் தனியாக வாழ்ந்து வருகிறார்.   பிஎச்டி முடித்த அந்தப் பெண் இரண்டாவது பிஹெச்டி படிப்பிற்காக கோவையில் ஒரு பல்கலைக்கழகத்திற்கு அடிக்கடி வந்து சென்றிருக்கிறார். 

 அந்த வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு அந்த பேராசிரியை கேரள மாநிலத்தில் பாலக்காடுக்கு சென்று இருக்கிறார்.   அப்போது அங்கு ஒரு வங்கியில் கணக்காளராக பணிபுரிந்த பாலக்காட்டைச் சேர்ந்த கோபுகுமார் என்கிற 43 வயது வாலிபருடன் அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது.  அவருக்கு திருமணம் ஆகி மனைவி குழந்தை உள்ளது.

x

 வங்கியில் பணம் எடுத்து வந்த பேராசிரியைக்கு  உதவியாக இருந்திருக்கிறார்.  பின்னர் அவர் வங்கி சலானில் குறிப்பிட்டு இருந்த பேராசிரியை செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.   உங்களிடம் நண்பராக இருக்க விரும்புகிறேன் என்று அடிக்கடி பேசி வந்திருக்கிறார்.

 அந்த நிலையில் தான் படிப்பு விஷயமாக கோவைக்கு வருவதாக சொல்லி இருக்கிறார் பேராசிரியை.  இதை கேட்ட கோபுகுமார் தானும் பிஎச்டி படிக்க நீங்கள் உதவ வேண்டும் என்று சொல்லி அதற்காக கோவை வருகிறேன்  என்று சொல்லி இருக்கிறார்.    கடந்த 2021 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் பேராசிரியை மற்றும் கோபுகுமார் இருவரும் கோவைக்கு சென்று இருக்கிறார்கள்.   பின்னர் அவர்கள் ரெண்டு பேரும் காரில் பல்கலைக்கழகத்திற்கு சென்று இருக்கிறார்கள் .

பேராசிரியையை தனது உறவினர் வீட்டுக்கு செல்லலாம் என்று கோபமாய் அழைத்திருக்கிறார்.  அதற்கு முன்னதாக சாப்பிடலாம் என்று சொல்லி  ஒரு தனியார் ஓட்டலுக்கு அழைத்துச் சென்று அறை எடுத்து தங்கியிருக்கிறார்.   பேராசிரியையிடம் நீங்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று திடீரென்று பேசி தான் கொண்டு வந்த தாலியை பேராசிரியை கழித்தில் கட்டியிருக்கிறார்.   இதில் கடும் அதிர்ச்சி அடைந்த பேராசிரியை அவருடன் தகராறு செய்திருக்கிறார். 

 உல்லாசமாக இருந்ததை பேராசிரியைக்கு தெரியாமல் போட்டோ மட்டும் வீடியோ எடுத்திருக்கிறார்.   பின்னர் அதை காட்டி  அடிக்கடி அவரை மிரட்டி  பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார்.    பேராசிரிய்க்கு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறது.   அதன் பின்னரும் விடாமல் தொல்லை செய்து வந்திருக்கிறார்.  இதை அடுத்து பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பேராசிரியை புகார் அளித்திருக்கிறார்.   போலீசார் வழக்கு பதிவு செய்து ஆபாச புகைப்படம் வீடியோ எடுத்து மிரட்டுதல் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ்  வழக்கு பதிவு செய்து கோபுகுமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார்.