"முத்தம் கொடுத்தால் சத்தம் போடுவேன் " -மாணவியிடம் பயாலஜி வாத்தியாரின் பலான வேலை

 
rape

டியூஷனுக்கு வந்த மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ஒரு ஆசிரியரை போலீஸ் கைது செய்தது 

Kolkata student molestation
மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள எக்பல்போர் பகுதியில் உள்ள பள்ளியில் ஒரு 16 வயதான மாணவி மேல்நிலை வகுப்பில் படித்து வருகிறார் .இவர் சமீபத்தில் நடந்த எக்ஸாமில் பயாலஜி பாடத்தில் மார்க் குறைவாக எடுத்தார் .அதனால் அவரின் பெற்றோர் அவரை  ஏதாவது ட்யூஷனில் சேர்த்து விட முடிவெடுத்தனர் .அதன் படி அவர்கள் அதே பகுதியில் டியூஷன் எடுக்கும் 40 வயதான ஒரு பயாலஜி ஆசிரியரிடம் ட்யூஷனில் சேர்த்து விட்டனர் .அந்த மாணவியும் அந்த ஆசிரியரிடம் தினமும் சிறப்பு வகுப்புக்கு சென்று வந்தார் .அப்போது அந்த ஆசிரியர் அந்த மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் .மேலும் அவருக்கு பாடம் எடுக்கும் போது அவரை பல இடங்களில் தொட்டு தொட்டு பாடம் நடத்துவாராம் .இதனால் அந்த மாணவி மிகவும் மன வேதனையடைந்தார் .அந்த ஆசிரியரிடம் அந்த பெண் 'இப்படி செய்ய வேண்டாம் தான் படித்து மார்க் நிறைய எடுக்க வேண்டும்' என்றார் .அதன் பிறகும் அந்த ஆசிரியர் அந்த பெண்ணை ஒரு தனியறையில் வைத்து முத்தமிட வந்துள்ளார் .அதனால் அந்த பெண் சத்தம் போட்டு ஊரை கூட்டுவேன் என்று கூறி விட்டு வந்து விட்டார் .
பின்னர் இந்த விஷத்தை தன்னுடைய பெற்றோரிடம் கூறினார் .அதை கேட்டு அவர்கள் கொதித்தார்கள் 
பிறகு அந்த பெண்ணின் தந்தை அக்டோபர் 7 ஆம் தேதி போலீஸை அணுகி தனது மகளின் ஆசிரியர் அவரிடம்  தவறாக நடந்து கொண்டதாக புகார் அளித்தார்.போலீசார் அந்த ஆசிரியர் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்