சாலையில் சென்ற சிறுமியை பஸ் டிப்போவுக்குள் தூக்கிச்சென்ற சிறுவன் கைது - 2 பேர் தலைமறைவு

 
ஹ்

சாலையில் சென்ற சிறுமியிஐ பஸ் டிப்போவுக்குள் தூக்கிச் சென்ற சிறுவன் கைது செய்யப்பட்டிருக்கிறான்.   அவனுடன் சேர்ந்த இரண்டு நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.   பழங்குடியின பெண்ணுக்கு நடந்த இந்த கொடுமை குஜராத் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 அம்மாநிலத்தில் வதோதரா பகுதியில் கடந்த இரண்டாம் தேதியன்று 16 வயது பழங்குடியின சிறுமி ஒருவர் இரவு 8 மணிக்கு சாலையில் சென்றிருக்கிறார் .  நியூ விஐபி சாலை அருகே சென்றபோது அங்கே நின்று கொண்டிருந்த சிறுவன் சிறுமியிடம் நெருங்கி வந்திருக்கிறான்.  இதைப் பார்த்து பயந்து சிறுமி ஓடியிருக்கிறார்.

அ

 சிறுவன் துரத்த அவனுடன் சேர்ந்து இரண்டு பேரும் துரத்தி இருக்கிறார்கள்.   மூச்சிரைக்க ஓடிய சிறுமியை சிறுவனும் அந்த இரண்டு நபர்களும் சேர்த்து பிடித்து வாயை பொத்தி அங்கிருந்த பஸ் டிப்போவுக்குள் தூக்கிச் சென்றிருக்கிறார்கள்.   அங்கு சிறுமியை மூன்று பேரும் பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்கள்.

 இதன் பின்னர் தப்பித்து வந்த சிறுமி தன் குடும்பத்தினரிடம் சொல்லி அழுதிருக்கிறார்.   இதைக்கேட்ட சிறுமியின் மாமா போலீசில் புகார் அளிக்க ,  சிறுமி சொன்ன அடையாளங்களை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு அந்த சிறுவனை கைது செய்துள்ளனர்.   மற்ற 2 பேர் குறித்து அந்த சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 சாலையில் நடந்து சென்ற பழங்குடியின பெண்ணுக்கு ஏற்பட்ட இந்த கொடூரம் வதோதரா பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.   அந்த பழங்குடியின சிறுமிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.