ஓ.. டார்லிங் என்ற மணமகன் -ஓங்கி அறைந்த மணமகள் -மண மேடையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
ஒரு மண மேடையில் ஒரு மணமகனை ஒரு மணமகள் அறைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது
உத்தரபிரதேசத்தின் ஹமிர்பூர் மாவட்டத்தில் சனிக்கிழமையன்று ஒரு திருமண மேடையில் மணமகனும் மணமகளும் ஒரு வரவேற்பு நிகழ்ச்சியில் நின்று கொண்டிருந்தனர்
அப்போது அந்த திருமண மேடையில் மணமகன் மணப்பெண்ணுக்கு 'ஓ மை டார்லிங்' என்றபடி ஆசையாக மாலையை அணிவித்தார் . ஆனால்,அப்போது யாரும் எதிர்பாராத நிலையில், மணமகள் அவரை இருமுறை அறைந்துவிட்டு, மேடையிலிருந்து வெளியேறினார் . இதைப் பார்த்த விருந்தினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இது பற்றி அங்கு வந்தவர் கூறுகையில் ,மணமகள் ஏதோ கோவத்தில் இருந்தார் என தெரியவந்துள்ளதால் இப்படி நடந்து கொண்டார் என்றார் . அவர் மணமகனை அடித்ததையடுத்து அங்கு சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து உள்ளூர் போலீசார் மற்றும் குடும்பத்தினர் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில் சிறிது நேரம் கழித்து திருமணம் நடந்தது
இதற்கிடையில், வீடியோ வைரலாகி, சமூக ஊடக பயனர்களிடமிருந்து பல வித கமெண்டுகள் வந்த வண்ணம் உண்ணன. சிலர் இதைப் பார்த்து சிரித்தாலும், பலர் மணமகள் மணமகனை அறைந்திருக்கக் கூடாது என்றே கூறுகின்றனர்.