வியாபார போட்டி- கஞ்சா வியாபாரி அடித்துக் கொலை

 
murder murder

சிங்கப்பெருமாள் கோயில் அருகே கஞ்சா வியாபாரி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

murder

காஞ்சிபுரம் மாவட்டம் களியப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் சரவணன் (வயது 20). இவர் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்த பிரவீன் என்பவருக்கும் அவருடன் தொடர்பு ஏற்பட்டு நட்பு ரீதியாக பழகி வந்தனர் 

இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சரவணன் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று மீண்டும் வந்துள்ளார் அப்போது பிரவீனுக்கும் சரவணனுக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரவீன் மற்றும்  நண்பர்கள் ஆகியோர் கஞ்சா வியாபாரி சரவணனை சிங்கபெருமாள் கோவில் பகுதிக்கு வரவழைத்து ஒன்றாக மது அருந்திவிட்டு அவரை அடித்து கொலை செய்துள்ளனர்

பின்பு சடலத்தை ஸ்ரீ பெருமந்தூர் மாநில நெடுஞ்சாலையில் வீசிவிட்டு சென்றுள்ளனர் சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மறைமலைநகர் போலீசார் பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்பு கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிங்கப்பெருமாள் கோவில் அருகே கஞ்சா விற்பனையில் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக வாலிபர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.