"இரவெல்லாம் உறவுக்கு கூப்பிட்டு போன் வருதே.." -கல்லுாரி பேராசிரியைக்கு கரஸ்பான்டென்ட்டால் நேர்ந்த கதி

 
phone


 
தனியார் கல்லுாரியின் பெண் பேராசிரியை குறித்து பொது கழிப்பறைகளில் ஆபாசமாக சுவரொட்டி ஒட்டிய, அந்த கல்லுாரியின் கரஸ்பான்டென்ட் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்

rape

கர்நாடக மாநிலம் மங்களூரு தனியார் கல்லுாரியில் பெண்  பேராசிரியை ஒருவர் பணி புரிந்தார் 
அந்த கல்லுாரியில் பணி நியமனம் தொடர்பாக கல்லுாரி கரெஸ்பாண்டென்ட்டுக்கும் , அந்த பெண் விரிவுரையாளருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. எனவே,அங்குள்ள பொது  கழிப்பறையில், அந்த பெண் விரிவுரையாளரை  'விபச்சாரி' என்று,போலியாக ஒரு சுவரொட்டியை தயாரித்து, அதில் அவரது தொலைபேசி எண், இ-மெயில் முகவரியையும் குறிப்பிட்டு மானாவாரியாக எழுதி ஒட்டியுள்ளார்.
இதனால் அந்த பெண் வெகுவாக பாதிக்கப்பட்டார். 
:இதனால் அவருக்கு இரவெல்லாம் தொடர்ச்சியாக உல்லாசத்துக்கு அழைத்து தொலைபேசி அழைப்பு கடந்தாண்டு டிசம்பரில் இருந்து வந்தது..அதன் பின், அந்த சுவரொட்டியை யார் ஒட்டியது என விசாரித்த போது, கரஸ்பான்டன்ட் மற்றும் இருவருக்கு தொடர்பு இருப்பது தெரிந்து,அவர்கள் மீது போலீசில் அவர் புகார்   கூறினார்.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், தனியார் கல்லுாரி கரஸ்பான்டென்ட், பெல்தங்கடியை சேர்ந்த பிரகாஷ் ஷெனாய், 44, பொருளாதார பாட விரிவுரையாளர் பிரதீப் பூஜாரி, 36, உடற்பயிற்சி இயக்குனர் தர்நாத் ஷெட்டி, 32, ஆகியோரை கைது செய்தனர்.