"அழகான மாணவிகளிடம் அசிங்கமாக பேசி ..." வலை வீசிய கல்லூரி ஆசிரியரால் நேர்ந்த விபரீதம் .

 
women Rape

தனியார் கல்லூரி மாணவிகளுக்கு  பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் கைது செய்யப்பட்டார். 

rape

தமிழகத்தின் சென்னை வேளச்சேரி அருகே   ஒரு தனியார் ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி உள்ளது. இங்கு48 வயதான ஆபிரகாம் அலெக்ஸ் என்பவர்  பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவர், வகுப்புகளில் அழகான மாணவிகளிடம் அசிங்கமாக  பேசி, பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால்  ,இவரால் பாதிக்கப்பட்ட  மாணவிகள், கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் அவர் மீது எடுக்கவில்லை .
 இந்நிலையில், மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துவரும் பேராசிரியரை கைது செய்யவேண்டும் என்று கல்லூரியில்  மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதும் நிர்வாகத்தினர் கண்டு கொள்ளாதால் காண்டான  பாதிக்கப்பட்ட மாணவிகள்  குமாரி, மீனா ஆகிய இருவரும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் கல்லூரி முதல்வர் ராமநாதன் மற்றும் சம்பந்தப்பட்ட பேராசிரியர் ஆபிரகாம் அலெக்ஸ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதில், பாட வகுப்புகள் மற்றும் ஓய்வு நேரங்களில் மாணவிகளிடம் தகாத வார்த்தைகளை கூறி, ஆபாசமாக பேசுவதுடன், பாலியல் தொல்லையில் பேராசிரியர் ஆபிரகாம் அலெக்ஸ் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, வழக்குப்பதிவு செய்து, பேராசிரியர் ஆபிரகாம் அலெக்சை கைது செய்தனர்.