"அடப்பாவி! எங்கம்மாவை வச்சிக்கிட்டே ,என்னை கட்டிக்கிட்டியே.." -ஒரு கண்டக்டரின் காம லீலைகள்
13 வயது சிறுமியை நாலாவது திருமணம் செய்து கர்ப்பமாக்கிய அரசு பஸ் நடத்துநரை கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரியகருக்கை கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார்.இவருக்கு கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பரமேஸ்வரி என்பவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது .அதன் பிறகு பரமேஸ்வரியிடம் பேசி அவரின் 13 வயதான மகளை கல்யாணம் செய்து கொண்டார் .ஆனால் இவருக்கு ஏற்க்கனவே மூன்று முறை திருமணம் ஆன விஷயத்தை அவர் அந்த பெண்ணிடம் மறைத்துள்ளார் .ஆனால் மூன்று கல்யாணத்திலும் அவருக்கு குழந்தையில்லாததால் இந்த முடிவு எடுத்துள்ளார் .
பிறகு அந்த 13 வயதான பெண்ணுடன் திருமணம் நடந்த அன்றே ராதாகிருஷ்ணன் சிறுமியை வற்புறுத்தி உறவு கொண்டதால் சிறுமி 5 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அலுவலரிடம் புகாரளிக்கப்பட்டது .பிறகு அவர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்டக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த பரமேஸ்வரி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றார்.
மேலும் திருமணத்திற்கு துணைநின்ற ராதாகிருஷ்ணன் தாய் ருக்குமணி மீது வழக்கு பதிவு தேடி வருகின்றனர்