கள்ளக்காதலி மீது சந்தேகம்- பீர் பாட்டிலால் சரமாரியாக குத்திக் கொலை செய்த கள்ளக்காதலன்

 
murder murder

சென்னையில் கள்ளக்காதலி மீதான சந்தேகத்தால் பீர் பாட்டிலால் சரமாரியாக குத்திக் கொலை செய்த கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.

murder

சென்னை வியாசர்பாடி ஜே .ஜே நகர் 7வது தெருவை சேர்ந்தவர் செல்வேந்திரன். இவரது மனைவி பிரியங்கா. இவர்களுக்கு ராஜேஸ்வரி, ராகுல் என்ற குழந்தைகள் உள்ளனர். பிரியங்கா(வயது30) கடந்த இரண்டு வருடங்களாக செல்வேந்திரனை விட்டு  பிரிந்து தனியாக சென்ற நிலையில், சின்ன நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கோவிந்தராஜ் (வயது 31) என்பவருடன்  தொடர்பு ஏற்பட்டு இரண்டு பேரும் ஒன்றாக வாழ்ந்ததாக தெரிகிறது. கடந்த புதன்கிழமை வீட்டை விட்டு சென்ற பிரியங்கா, மீண்டும் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் அவர் மீது  சந்தேகம் அடைந்த கோவிந்தராஜ் பிரியங்காவை எங்கு சென்றாய் என கேட்டு தகராறு செய்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மீண்டும் இரவு சமாதானப்படுத்தி மது அருந்தலாம் வா என கூப்பிட்டு மணலி பகுதியுள்ள தொழிற்சாலையின் பின்புறம் காலி இடத்தில் இரண்டு பேரும் மது அருந்தி உள்ளனர். அப்போது மீண்டும் இருவருக்கும் தகராறு நடந்துள்ளது. 

உடனே கோவிந்தராஜ் மது அருந்தி  கொண்டிருந்த பீர் பாட்டிலை உடைத்து சரமாரியாக கழுத்து வயிற்று பகுதிகளில் பிரியங்காவை குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே பிரியங்கா இறந்துள்ளார். நள்ளிரவு ஒரு மணி அளவில் கோவிந்தராஜ் வியாசர்பாடி போலீஸ் நிலையத்திற்கு சென்று நான் எனது கள்ள காதலியை குத்திக் கொன்று விட்டேன் எனக் கூறியுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வியாசர்பாடி போலீசார் அங்கு பிரியங்கா இறந்து கிடந்ததை பார்த்து அந்தப் பகுதி மணலி காவல் நிலைய எல்லை பகுதி என்பதால் உடனே மணலி போலீசாரை வரவழைத்தனர். மணலி போலீசார் பிரியங்காவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோவிந்தராஜை மணலி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.