"பூஜைக்கு வந்த பூசாரியை படுக்கையில் தள்ளி..." -புருஷன பிரிஞ்ச பொண்ணு செஞ்ச வேலைய பாருங்க
.
பூஜை செய்யும் பூசாரியுடன் உல்லாசம் கொண்டு வீடியோ எடுத்து அவரிடம் பணம் பறித்த ஒரு பெண் தலைமையில் செயல்பட்ட நபர்களை போலீஸ் கைது செய்தது
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா சனிவாரசந்தே பகுதியை சேர்ந்த 35வயதான பவ்யா,தன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். இதையடுத்து ராஜூ என்பவருடன் பவ்யா வாழ்ந்து வந்தார் . .
இந்த நிலையில் அவர்கள் சிக்கமகளூருவை சேர்ந்த பூசாரி ஒருவரை அணுகி, தங்களுக்கு நிம்மதி இல்லை, வீட்டில் வந்து பூஜைகள் செய்யும்படி கூறியுள்ளனர். அதன்படி அந்த பூசாரியும் பவ்யாவின் வீட்டுக்கு வந்து பூஜை செய்தார்.அப்போது அந்த பூசாரி வசதியானவர் எண்பதையறிந்த அந்த பெண் அவரிடம் பணம் பறிக்க திட்டம் போட்டார் .அப்போது அந்த பூசாரியை உல்லாசத்துக்கு வரும்படி அவரை கட்டாயப்படுத்தி உல்லாசம் அனுபவித்தார் .இதை அவரின் ரெண்டாவது கணவன் ராஜு ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார் .பிறகு அந்த வீடியோவை அந்த பூசாரியிடம் காண்பித்து ,பணம் கொடுக்கவில்லை என்றால் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதாகவும் அவர்கள் மிரட்டி பணம் கேட்டனர் .அதனால் அந்த பூசாரி பயந்து 49 லட்சம் வரை பல தவணைகளில் கொடுத்தார் .பின்னர் அவர்கள் மேலும் பணம் கேட்டதால் அந்த பூசாரி அவர்கள் மீது போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிந்து அந்த தம்பதிகளை கைது செய்தனர்