வெடித்த தீபாவளி! மனைவி கவலைக்கிடம்- அவரின் ஆண் நண்பர் உயிரிழப்பு

 
g

எத்தனை சொல்லியும் கேட்காததால் மனைவியையும் அவரின் கள்ளக்காதலனையும் சரமாரியாக குத்தி இருக்கிறார் தீபாவளி .  நடுரோட்டில் நடந்த இந்த சம்பவத்தில் இருவரும் உயிர்  பிழைக்க தப்பி ஓடி இருக்கிறார்கள்.  ஆனால் அப்பெண் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.  அந்த வாலிபர் ஓடும்போதே உயிரிழந்திருக்கிறார்.

 தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி அருகே உள்ளது கோம்பைதொழு கிராமம்.   இக்கிராமத்தைச் சேர்ந்தவர் தீபாவளி.  40 வயதான இந்த வாலிபரின் மனைவி சங்கீதா. இந்த தம்பதிக்கு ஏழு வயதில் ஒரு மகன் உள்ளார். 

 சங்கீதாவுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் என்கிற 38 வயது வாலிபருக்கும் இடையே கள்ள உறவு ஏற்பட்டிருக்கிறது.  ஈஸ்வரனுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.   சங்கீதா- ஈஸ்வரனின் விவகாரம் தீபாவளிக்கு தெரிய வந்ததும் இருவரையும் கண்டித்து இருக்கிறார் .  ஒவ்வொரு முறையும் தீபாவளியை கண்டித்து வந்தாலும் இருவரும் வழக்கம்போல் தங்கள் கள்ள உறவை தொடர்ந்து வந்திருக்கிறார்கள். 

k

 பலமுறை கண்டித்து பார்த்தும் கேட்காததால் இருவர் மீதும்  கடும் ஆத்திரத்தில் இருந்திருக்கிறார் தீபாவளி. இருவரையும் கொலை செய்யும் ஆவேசத்தில் இருந்திருக்கிறார். இந்த நிலையில் தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கிறார் தீபாவளி என்று இருவரும் மயிலாடும்பாறை காவல் நிலையத்திற்கு சென்று பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்திருக்கிறார்கள் . அவர்களை ஆண்டிப்பட்டி மகளிர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு செல்லுமாறு அறிவுறுத்தி இருக்கிறார்கள் போலீசார்.

 இதனால் நேற்று பகல் ஒரு மணிக்கு சங்கீதாவும் ஈஸ்வரனும் ஆண்டிப்பட்டி பேருந்து நிலையத்தில்  இறங்கி இருக்கிறார்கள் . இதையெல்லாம் தெரிந்து கொண்டு முன்னதாகவே ஆண்டிப்பட்டி பேருந்து நிலையம் சென்று கத்தியுடன் காத்திருந்திருக்கிறார் தீபாவளி.  பேருந்தில் இருந்து ஈஸ்வரனும் சங்கீதாவும் இறங்கியதும்  இரண்டு பேரையும் கத்தியால் குத்தி இருக்கிறார் தீபாவளி.  கத்தியால் குத்துப்பட்டு ரத்தம் வழிந்து ஓடி இருக்கிறது.  அப்படியே சத்தம் போட்டுக் கொண்டு ஈஸ்வரனும் சங்கீதாவும் அனைத்து மகளிர் காவல் நிலைய வாசலுக்கு ஓடி இருக்கிறார்கள்.  அங்கு சென்று தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். 

 பின்னர் படுகாயம் அடைந்த  இருவரையும் மீட்ட போலீசார் தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். ஈஸ்வரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்கள்.   ஆபத்தான நிலையில் சங்கீதா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.    ஆண்டிப்பட்டி போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து சரணடைந்த தீபாவளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.