"நிதானமில்லாத நேரத்தில் பெண்ணை நிர்வாணமாக்கி.." -சொகுசு காரை காமித்து ஏமாற்றிய டான்ஸ் மாஸ்டர்

 
gang rape

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த டான்ஸ் மாஸ்டர் கைது.

rape

தமிழகத்தின் சென்னை மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான வினோதா  என்ற இளம்பெண்ணுக்கு
திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 32 வயதான பிரபு என்ற நடனப்பள்ளி ஆசிரியருடன் சமூக வலைதளம் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது.அந்த பெண்ணின் சகோதரர் அந்த  டான்ஸ் மாஸ்டரிடம் நடனம் கற்றுக்கொள்ள சென்ற போது ,அவர் மூலம் அந்த பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது .அதன் பின்னர் அந்த டான்ஸ் மாஸ்ட்டர் அந்த பெண்ணுடன் போனில் பேசி பழகி, அவரை தன்னுடைய சொகுசு காரில் வெளியே வருமாறு அழைத்து சென்றார் ,அந்த பெண்ணும் அவரின் சொகுசு காரில் அவருடன் அவரின் சொந்த ஊருக்கு சென்றார் .பின்னர் அந்த ஊரிலுள்ள வீட்டில் அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்தார் .அப்போது அந்த  டான்ஸ் மாஸ்டரின் தாயாரும் இதற்கு உடந்தையாக இருந்தர் .பின்னர் அந்த பெண் மயங்கியதும் அவரின்  உடைகளை களைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்தார் .பின்னர் மயக்கம் தெளிந்து அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை உணர்ந்து இது பற்றி கேட்டபோது ,அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறினார் .ஆனால் இப்போது அந்த  டான்ஸ் மாஸ்டர் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக அந்த பெண் மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார் .போலீசார் அந்த பெண்ணின் புகாரின்  பேரில் வழக்கு பதிந்து அந்த  டான்ஸ் மாஸ்டரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்