"என் அம்மாவுக்கு ரெண்டாவது கல்யாணம்" -தந்தை கொடுமையால் மகள் செஞ்ச காரியம்

 
marraige


தந்தை கொடுமையால் விவாகரத்து பெற்ற தாயின் இரண்டாவது திருமணத்தை அவரின் மகள் நடத்தி வைத்த போட்டோக்கள் சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது 

Image

சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது திருமணம் மற்றும் பிறந்த நாள் ,கல்யாண நாள் போன்ற நிகழ்ச்சியின்  புகைப்படங்களை பதிவேற்றுவார்கள் . ஆனால் தனது தாய் அல்லது தந்தையின் கல்யாண போட்டோக்களை யாரும் வெளியிடமாட்டார்கள் .ஆனால் ஒரு பெண் தனது தாய்க்கு கல்யாணம் செய்து வைத்து அந்த போட்டோவை ஊடகத்தில் வெளியிட்டு பாராட்டுகளை பெற்றுள்ளார் 
அந்த டீனேஜ் பெண்ணின் தாய்க்கும்  தந்தைக்கும் 15 வருடங்களுக்கு முன்னர் விவாகரத்து நடந்து விட்டதாம்.  அந்த தந்தையின் கொடுமையை அந்த மகள் நேரில் பார்த்து மிகவும் மனம் நொந்து போனாராம் .அதனால் தனியாக இருந்த அம்மாவுக்கு அவரே திருமணம் செய்து வைத்தார்  

மேலும் எனக்கு 16 வயதில் சகோதரன் இருக்கிறான், அவனும் நானும் எங்களுக்கு தந்தை வேண்டும் என்று ஆரம்பத்தில் எதிர்பார்க்கவில்லை.  ஆனால் தற்போது  நாங்கள் தந்தை உருவத்தில் ஒருவரை வரவேற்க தயாராகியுள்ளோம் என்று கூறுகிறார்.  மேலும் திருமணத்திற்காக தனது தாய் மெஹந்தி போட்டுக்கொள்ளும் புகைப்படத்தையும், அவர் மகிழ்ச்சியாக நடனமாடும் வீடியோவையும் பதிவிட்டு, தனது தாய் இப்போதுதான் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.   

இவரின் இந்த செய்கைக்கு ஊடகத்தில் பலரும் பாராட்டுகளை குவித்து வருகின்றனர் .மேலும் அவரின் பெற்றோர்க்கு இவரை போல ஆதரவாக இருக்கவேண்டும் என்றும் கருத்துக்களை கூறியுள்ளனர்