ஆண் நண்பருடன் சேர்ந்து மாமனார், மாமியாரை கழுத்தை அறுத்து கொன்ற மருமகள்

 
k

ஆண் நண்பருடன் வாழ வேண்டும் என்பதற்காக ஆண் நண்பர் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து மாமனார்,  மாமியாரை கழுத்தை அறுத்துக் கொன்று நகை பணத்தை கொள்ளையடித்துள்ளார் மருமகள். இந்த இரட்டை கொலையில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் மருமகள் சிக்கிக் கொண்டிருக்கிறார்.  தலைமறைவாக இருக்கும் அவரின் ஆண் நண்பரையும் அவரின் கூட்டாளிகளையும் போலீசார் தேடி வருகின்றனர்.

டெல்லியில் பாகிரதி விஹார் பகுதியில் இரட்டைக் கொலை நடந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றபோது வயதான தம்பதியர் இருவரும் படித்த அறையில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்திருக்கிறார்கள் வீடு முழுவதும் பொருட்கள் சிதறி கிடந்திருக்கின்றன. வயதான தம்பதியரை கொன்றுவிட்டு மர்ம கும்பல் பொருட்களை கொள்ளை அடித்து சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு  வந்துள்ளது. 

m

 ராதே சியாம் வர்மா என்கிற 72 வயது முதியவரும்,  அவரது மனைவி வீணா என்கிற 68 வயது மூதாட்டியும் தான்  கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.  கரோல் பார்க் பகுதியில் உள்ள டெல்லி அரசு பள்ளியில் துணை முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் வர்மா.  கடந்த 33 ஆண்டுகளாக அதே வீட்டில் தான் அவர்கள் வசித்து வந்துள்ளனர்.

முதியவர்கள் இருவரும் வீட்டின் கீழுதளத்தில் வசித்து வந்துள்ளனர்.  மேல் தளத்தில் அவர்களின் மகன் ரவி ரத்தன் மனைவி மோனிகா வர்மாவுடன் வசித்து வந்திருக்கிறார்.  முஸ்தபா பகுதி நேர ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.  பின்னர்  ஆடை மற்றும் அழகு சாதன கடையும்  நடத்தி வருகிறார்.  இரவு 10:30 மணி அளவில் அவர் தன் பெற்றோரை பார்த்திருக்கிறார் . அதன் பின்னர் என்ன நடந்தது என்பது போலீசார் விசாரணை நடத்திய போது,  வீட்டில் இருந்த 4.50 லட்சம் ரூபாய் மற்றும் நகைகள் காணாமல் போனது தெரிய வந்திருக்கிறது.

 போலீசார் இது குறித்து விசாரணையில் தீவிரமாக இறங்கிய போது தான் ரவி ரத்தனின் மனைவி மோனிகாவுக்கு இந்த இரட்டை கொலையில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.  மோனிகா வர்மாவுக்கும் வாலிபர் ஒருவருக்கும் கள்ள உறவு இருந்து வந்திருக்கிறது.  காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக மாமனார் மாமியாரைக் கொன்று பணம் நகையை கொள்ளை அடித்தது தெரியவந்திருக்கிறது.  ஆண் நண்பரையும் அவரது கூட்டாளிகளையும் நள்ளிரவில் வரவைத்து வர்மாவையும் அவரது மனைவியையும் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு நகை பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள்.  இதன் பின்னர் மோனிகாவை கைது செய்துள்ளனர்.  தலைமறைவாக இருக்கும் அவரது ஆண் நண்பரையும் அவரின் கூட்டாளிகளையும் தேடி வருகின்றனர்.