பள்ளி வளாகத்தில் வாலிபர் சடலம் - கள்ளக்காதலி கைது
கர்நாடக மாநிலத்தில் கலப்புரகி மாவட்டத்தில் ஜீவர்கி தாலுக்கா சோனா கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ். 29 வயதான இந்த வாலிபர் கடந்த வாரத்தில் அதே பகுதியில் உள்ள பள்ளி வளாகத்தில் சடலமாக கிடந்திருக்கிறார்.
தகவல் அறிந்து ஜீவர்கி போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு அது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த நிங்கம்மா, திப்பண்ணா, நூர்ஜகான் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மூன்று பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் சந்தோஷை அடித்துக் கொலை செய்தது தெரிய வந்திருக்கிறது. சந்தோஷுக்கும் லிங்கம்மாவுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்திருக்கிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்திருக்கிறார்கள். இதற்கிடையில் சந்தோஷுக்குத் தெரியாமல் திப்பண்ணா என்பவரிடம் கள்ள உறவில் இருந்து வந்திருக்கிறார் நிங்கம்மா. இது சந்தோஷுக்கு தெரிய வந்திருக்கிறது.
இதனால் அவருக்கும் நிங்கம்மாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது . இது குறித்து திப்பண்ணாவிடம் நிங்கம்மா சொல்லி அவருக்கு ஆத்திரமூட்டி வந்திருக்கிறார்.
சம்பவத்தன்று நிங்கம்மா வீட்டிற்கு சென்று அவருடன் உல்லாசமாக இருந்திருக்கிறார் சந்தோஷ். அந்த நேரம் பார்த்து திப்பண்ணா வந்திருக்கிறார். சந்தோஷும் நிங்கமாவும் ஒன்றாக இருந்ததை பார்த்து ஆத்திரமடைந்திருக்கிறார் திப்பண்ணா. இதை அடுத்து அவர் சந்தோஷை சரமாரியாக தாக்கியிருக்கிறார். இதில் சந்தோஷ் உயிரிழந்திருக்கிறார். பின்னர் நிங்கம்மா , பக்கத்து வீட்டு பெண் நூர்ஜகான் ஆகியோர் சேர்ந்து சந்தோஷ் உடலை தூக்கி சென்று பள்ளி வளாகத்தில் வீசிவிட்டு வந்திருக்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது. இதை அடுத்து போலீசார் மூன்று பேரையும் கைது செய்துள்ளனர்.