கல்லூரி மாணவியை வீடியோ எடுத்து மிரட்டி வந்த பல் டாக்டர் சிறையில் அடைப்பு

 
v

சமூக வலைத்தளம் மூலமாக அறிமுகமான கல்லூரி மாணவியை திருமணம் செய்வது செய்து கொள்வதாக சொல்லி ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய பல் டாக்டர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் அடுத்த ஆற்றிங்கல் பகுதியைச் சேர்ந்தவர் சுபி நாயர்.  32 வயதான இந்த வாலிபர் பல் டாக்டர்.  வர்க்கலா என்கிற பகுதியில் இவர் பல் மருத்துவமனை நடத்தி வந்துள்ளார்.   டாக்டர் சுபிக்கு சமூக வலைத்தளம் மூலமாக விளிஞ்ஞம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் அறிமுகமாக இருக்கிறார். 

g

 இருவரும் நண்பர்களாக பழகி வந்தவர்கள் ஒரு கட்டத்தில் காதலர்களாக மாறி இருக்கிறார்கள்.  அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி ஆசை வார்த்தைகள் கூறி வந்திருக்கிறார்.  அதன் பின்னர் இருவரும் நேரில் சந்தித்துக் கொண்டு கோவளம் உட்பட பல்வேறு இடங்களுக்கு சென்றிருக்கிறார்கள்.   அங்கெல்லாம் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் டாக்டர்.  அப்போதெல்லாம் அதை ரகசியமாக வீடியோவும் எடுத்து வைத்திருக்கிறார்.  பின்னர் மாணவி சம்மதிக்காத நேரங்களில் அந்த வீடியோவை காட்டி மிரட்டி மீண்டும் மீண்டும் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார்.  இதனால் அந்த மாணவி கர்ப்பமடைந்திருக்கிறார். 

 மாணவி கர்ப்பமாக இருப்பது தெரிந்ததும் கருவை கலைக்க சொல்லி டாக்டர் சுபி மிரட்டி இருக்கிறார்.  ஆனால் கருவை கலைக்காமல் மாணவி இருந்தபோது,  அவரை மிரட்டி கருவை கலைக்க செய்து இருக்கிறார்.  அதன் பின்னரும் திருமணம் செய்து சொல்லாமல் நாட்களை கடத்தி வந்திருக்கிறார் டாக்டர் சிபி. 

 மாணவி,  தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்திருக்கிறார்.  இந்த நிலையில் தான் டாக்டர் தன்னை ஏமாற்றுவதாக அறிந்த மனைவி விளிஞ்ஞம் போலீசில் புகார் செய்துள்ளார்.  மாணவி அளித்த இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி டாக்டர் சுபியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவு அடுத்து சிறையில் அடைத்துள்ளனர்.