கணவரை பிரிந்து வாழ்ந்த தாயின் நடத்தையில் சந்தேகம் -வெட்டிக்கொன்ற மகன்

 
ar

கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த தாயின் நடத்தையில் சந்தேகம் கொண்ட மகன் அவரை வெட்டிக் கொலை செய்துள்ளார்.

 சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் படுத்த பூவந்தி. இவ்வூரில்  எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அருள்ஜோதி(45).  இவருக்கு விக்னேஷ், விஷ்ணு பிரபு என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.  கணவர் சிவஞானத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் கடந்த 10 ஆண்டுகளாக அவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

k

 அருள் ஜோதியின்  மூத்த மகன் சென்னையில் வேலை பார்த்து வந்த நிலையில் இளைய மகன் விஷ்ணு பிரபுவுடன் உள்ளூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.  இளைய மகன் விஷ்ணு பிரபுவுடன் அருள்ஜோதி வசித்து வந்திருக்கிறார்.

 தாயுடன் வசித்து வந்த விஷ்ணு பிரபு அடிக்கடி தந்தை வீட்டிற்கும் சென்று வந்திருக்கிறார்.   இந்த சூழ்நிலையில் தாய் அருள்ஜோதியின் நடத்தையில் மகனுக்கு சந்தேகம் வந்திருக்கிறது.   இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.

 இந்த நிலையில் நேற்று இரவு முன் தினம் மீண்டும் பிரச்சினை வந்து இருக்கிறது.  அப்போது தாய் அருள்ஜோதியை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி இருக்கிறார் விஷ்ணு பிரபு.  தகவல் அறிந்த பூவந்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விஷ்ணு பிரபுவை தேடி வந்த போது,  அவர் உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பது தெரிய வந்ததும் அங்கே சென்று அவரை கைது செய்துள்ளனர்.