நடத்தையில் சந்தேகம்- மனைவியுடன் மகளையும் சரமாரி குத்திவிட்டு வாலிபர் தற்கொலை

 
k

மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை கத்தியால் சரமாரி குத்தி ரத்த வெள்ளத்தில் சாய்த்ததோடு அல்லாமல் தடுக்க வந்த மகளையும் சரமாரி கத்தியால் குத்திய வாலிபர்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

 மகாராஷ்டிரா மாநிலத்தில் பால்கர் மாவட்டத்தில் பன்காவ் என்கிற பகுதியைச் சேர்ந்தவர் தசரத் கோவரி.  இவரின் மனைவி பானு .  இத்தம்பதிக்கு கௌரி என்ற மகள் உள்ளார்.   43 வயதான தசரத் கூலித்தொழிலாளி . இவர் தன் மனைவியின் நடத்தையில் அடிக்கடி சந்தேகப்பட்டு அவருடன் தகராறு செய்து வந்திருக்கிறார் .

க்ன்

சம்பவத்தன்றும் மனைவியுடன் நடத்தையில் சந்தேகம் குறித்து தகராறு செய்திருக்கிறார்.  இதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த தசரத்,  திடீரென்று வீட்டின் கதவை பூட்டி இருக்கிறார்.   பின்னர் சமையலறையில்  இருந்த கத்தியை எடுத்து வந்து மனைவி பானுவை சரமாரியாக கத்தியால் குத்தி இருக்கிறார். 

 இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மகள் கௌரி தந்தையை தடுக்க வந்திருக்கிறார்.  அதில் ஆத்திரம் அடைந்த அவர் மகளையும் கத்தியால் குத்தி இருக்கிறார்.  கத்திக்குத்தில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து உள்ளனர் பானுவும் அவரது மகளும் . 

இதை பார்த்து வேதனை அடைந்த தசரத் , வீட்டிலிருந்த கயிறை எடுத்து தூக்கில் தொங்கி இருக்கிறார்.  சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்த மதாயும் மகளும் உதவி கேட்டு சத்தம் போட்டு இருக்கிறார்கள்.   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து உள்ளே வந்த போது மூன்று பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளார்கள்.   அங்கு பரிசோதித்த மருத்துவர்கள்  தூக்கிட்டு தொங்கிய தசரத் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.  மனைவி மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . 

சம்பவம் குறித்து அறிந்தது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.