"ட்ரைவர் வேலைக்கு வந்து ..?"-காதல் திருமணத்தால் காண்டான மாமியார் -அடுத்து நடந்த விபரீதம் .

 
youth murder girl for one side love

காதல் திருமணம் செய்த கார் டிரைவர் தென்காசியில் படுகொலை செய்யப்பட்டதால் பலரை  போலீசார் கைது செய்தனர். 

murder
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மதுரை ரோடு பெருநாழி விலக்கு பகுதியை சேர்ந்த ஒரு கார் ட்ரைவரான  30 வயதான அரவிந்த் ,தென்காசியை சேர்ந்த 25 வயதான மாலா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டு ,அவர்களுக்கு  2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த காதல் திருமணம்  விஷயமாக மாலாவின் தாய் பொன் ராணிக்கும், அரவிந்திற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்தது. அரவிந்த் மீது மாமியார் பொன்ராணி கோபத்தில் இருந்தார் ..
இதற்கிடையே அந்த அரவிந்த் வேலையில்லாமல் இருந்ததால் ,வேலை தேடி வந்தார் .
இந்தநிலையில் கீழப்புலியூரை சேர்ந்த சீதாராமன், மணிகண்டன், தம்பிரான், பொன்னரசு ஆகியோர் விளாத்திகுளத்தில் இருந்த அரவிந்திற்கு போன் செய்து தென்காசியில் வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்துள்ளனர்.
அதனால் அந்த அரவிந்த்  அவர் கூப்பிட்டதும் அரவிந்த் தென்காசி வந்துள்ளார். கடந்த 3-ந் தேதி தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் இவர்கள் தங்கி உள்ளனர். மறுநாள் (4-ந் தேதி) அதிகாலை அரவிந்தை ஒரு காரை ஓட்டச்சொல்லி கூறியுள்ளனர்.
கார் தென்காசியிலிருந்து கீழப்புலியூர் சென்று கொண்டிருந்தது. அங்கு 4 பேரும் அரவிந்தை காரில் வைத்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை பாட்டா குறிச்சி சாலையிலுள்ள கல்குவாரி குட்டையில் கல்லை கட்டி வீசிவிட்டு சென்றுவிட்டனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி பொன்னரசுவை கைது செய்தனர். இந்தநிலையில் கொலை தொடர்பாக சங்கரன்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சீதாராமன், மணிகண்டன் ஆகியோர் சரண் அடைந்தனர். .