"அடுத்தடுத்து மகனும் தாயும் மரணம் "-'ஒர்க் பிரம் ஹோம்' காரணமாக போன இரண்டு உயிர்கள்
வீட்டிலேயே தொடர்ந்து நைட் ஷிப்ட் வேலை பார்த்த என்ஜினீயர் இறந்ததால், அதை பார்த்த அவரின் தாயும் தற்கொலை செய்து கொண்டார்
தமிழகத்தின் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் வசிக்கும் 29 வயதான சந்தோஷ்குமார்,ஜெர்மனியில் படித்து, சென்னையில் உள்ள பிரபல நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்தார்.இவர் கொரோனா பரவலால், வீட்டில் இருந்து பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவர் தொடர்ந்து நைட் ஷிப்ட்டில் வேலை பார்த்து வந்துள்ளார் ,மேலும் பணியிலும் தொடர்ந்து டார்கெட் கொடுத்துள்ளனர் .இதனால் அவர் இரவு பகல் பாராமல் பணியாற்றி வந்தார் .
இதனால் அவருக்கு உடல்நிலை சரியிலில்லாமல் போனதால் ,திடீரென்று சில நாட்களுக்கு முன்பு மயங்கி விழுந்தார் .இதனால் அவருக்கு அங்குள்ள ஹாஸ்ப்பிடலில் சிகிச்சை கொடுத்தும் பலனில்லாமல் அவர் இறந்தார் .இந்த விஷயத்தை அவரின் 54 வயதான தாயார் மேனகாவிடம் உறவினர்கள் கூறினர் .அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த தாய் வீட்டிலேயே தூக்கு மாட்டிக்கொண்டு இறந்து போனார் .ஒரே நேரத்தில் ஒரே வீட்டில் இரண்டு உயிர்கள் பலியானதால் அந்த பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் .இது பற்றி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.