தப்பி வந்த மாணவி கண்ணீர் - இளநீர் வியாபாரி சிறையிலடைப்பு

 
pp

இயற்கை உபாதை கழிப்பதற்காக புதர் பக்கம் சென்ற அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளநீர் வியாபாரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் அடுத்த தேவனூர் கல்வெட்டு கிராமம்.   இக்கிராமத்தில் மெயின் ரோட்டு தெருவை சேர்ந்தவர் செல்வகுமார்.   இளநீர் வியாபாரியான இந்த இளைஞர் அதே பகுதியில் வாரியங்காவல் அரசு பள்ளி பயிலும் மாணவி ஒருவர் இயற்கை உபாதை கழிக்க சென்றபோது அதை தெரிந்து கொண்டு பின் தொடர்ந்து சென்றிருக்கிறார்.

po

தனியாக இருந்த அந்த மாணவியிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்திருக்கிறார்.   அந்த இளைஞரை தள்ளிவிட்டு அவரிடம் இருந்து தப்பி வந்த மாணவி தனது பெற்றோரிடம் நடந்ததைச் சொல்லி அழுது இருக்கிறார்.

 இதைக் கேட்டு ஆவேசம் அடைந்த பெற்றோர்,  ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ளனர்.  போலீசார் இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து செல்வகுமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

அவரிடம் விசாரணை நடத்திய பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி நீதிபதியின் உத்தரவினை அடுத்து சிறையில் அடைத்துள்ளனர்.