திருமணத்தை மீறிய உறவு -மனைவி சரமாரியாக குத்திக் கொலை
திருமணத்தை மீறிய உறவால் மனைவியை சரமாரியாக குத்தி கொலை செய்திருக்கிறார் கணவன். அதை தடுக்க வந்த மாமியாரையும் சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடியிருக்கிறார். இதில் மாமியார் உயிர் பிழைத்திருக்கிறார்.
திருப்பூரில் முதலிபாளையம் சிட்கோ பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி சுஜாதா. இத்தம்பதிக்கு ரித்திகா, ரிதனிக் என்கிற
குழந்தைகள். மனைவி குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்திருக்கிறார் மணிகண்டன்.
வீட்டுக்கு அருகே உள்ள பணியின் பிரிண்டிங் நிறுவனத்தில் வேலை செய்து வந்திருக்கிறார் சுஜாதா. சுஜாதாவுக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக மணிகண்டன் சந்தேகப்பட்டு இருக்கிறார் . இதனால் மணிகண்டனுக்கும் சுஜாதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.
கடந்த ஒரு மாத காலமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் மனைவியிடம் சமரசம் பேசுவதற்காக சென்றிருக்கிறார் . அப்பொழுது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. இதில் மணிகண்டன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவி சுஜாதாவை குத்தி கொலை செய்திருக்கிறார்.
சுஜாதாவின் தாய் மாதவி ஓடி வந்து இதை தடுக்க முயன்றிருக்கிறார். அப்போது அவரையும் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி இருக்கிறார். இதில் சம்பவ இடத்திலேயே மனைவி சுஜாதா துடி துடித்து உயிரிழந்திருக்கிறார். படுகாயம் கடந்த மாதவியை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்துள்ளனர் தகவல் அறிந்ததும் ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து கணவர் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.