"போயும் போயும் பூனைகிட்டேயே .."பூனையை கொடுமைப்படுத்திய ஃபுட் பால் வீரரை ஃபுட் பால் ஆடிய போலீஸ் .
தான் வளர்த்த செல்ல பூனையை கொடுமைப்படுத்திய ஒரு புட் பால் வீரருக்கு கொடுமையான தண்டனை வழங்கப்பட்டது
இங்கிலாந்தின் லண்டனில் உள்ள வெஸ்ட் ஹாம் கால்பந்தாட்ட அணியின் பிரபல வீரர் கர்ட் சுவமா ,இவர் தன் வீட்டில் செல்லமாக 2 மில்லியன் மதிப்புள்ள இரண்டு பெங்கால் பூனைகளை வளர்த்து வந்தார்,அவர் ஒரு நாள் தன் வீட்டு பூனைகளுடன் வீட்டுக்குளேயே கால் பந்து விளையாடினார்
அப்போது அவரது வீட்டு பூனையை அவர் ஓங்கி அறைவதும், கையில் பிடித்து தூக்கி போட்டு ஒரு கால்பந்தைபோல் கிக்-ஷாட் அடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர் உதைத்த உதையில் அந்த பூனை பறந்து சென்று விழுகிறது, மேலும் அவர் வேகமாக அறையும் போதும் தலைகுப்பறை விழுந்து எழுந்து ஓடுகிறது, அதுமட்டுமின்றி அவர் அந்த பூனையை கடும் கோபத்துடன் விரட்டி விரட்டி தாக்கும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பார்ப்பவர்களை பதைபதைக்க வைத்துள்ளது.இந்த சம்பவத்துக்கு பலர் கடுமையான் எதிர்ப்பு தெரிவித்து அவர் மீது போலீசில் புகார் கொடுத்தனர் .அதனால் அவர் மக்களிடம் மன்னிப்பு கேட்டாலும் போலீசார் அவரை விடவில்லை
இந்த சம்பவம் தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தற்போது அவருக்கு 250,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் அடுத்த ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, அவர் வீட்டில் வளர்த்த இரு பூனைகளையும் இங்கிலாந்து நாட்டின் 'விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புக்கான ராயல் சொசைட்டி' (RSPCA) பறிமுதல் செய்துள்ளது.