"அடிக்கடி இரவில் வந்து உறவுக்கு கூப்பிட்டு ..."அடுத்து தனியா வசித்த 13 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

 
rape

வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 5 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

rape
சென்னை அடுத்த செங்குன்றத்தை சேர்ந்த 13 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறாள். அவரின்  தந்தையும், தாயும் குடும்ப தகராறில் பிரிந்து விட்டனர். இந்நிலையில் அந்த பெண் அவரின் சகோதரனுடன் வசித்து வந்தார் .அப்போது அந்த பெண்ணின் சகோதரனுக்கு அதே பகுதியில் வசிக்கும் சில பேருடன் தகராறு ஏற்பட்டதால் அவர் அந்த தங்கையை தனியாக விட்டு விட்டு அவரின் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார் ,
இதனால் அந்த பெண் தனியாக வீட்டில் வசித்து வந்த நிலையில் ,அந்த பகுதியை சேர்ந்த சிலர் அந்த பெண்ணின் வீட்டுக்கு இரவில் வந்து பாலியல் தொல்லை கொடுத்து அவரை வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர் .அந்த வாலிபர்கள்  ஏற்கனவே அவரின் சகோதரனுடன் தகறாரில் ஈடுபட்டவர்கள் என்பதை அந்த பெண் கண்டுபிடித்து அவர்கள் மீது அங்குள்ள போலீசில் புகார் கொடுத்தார் .அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் போலிசார் வழக்கு பதிந்து அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர் .