சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது - சித்தப்பாவுக்கு 22 ஆண்டுகள் சிறை

 
x

மகள் உறவு முறை என்றும் பாராமல் சிறுமியை கர்ப்பமாக்கியதால் அச்சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது.  இதனால் சித்தப்பாவுக்கு போக்சோ சட்டத்தில் 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது .

கோவையில் பட்டணம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி தந்தையுடன் வசித்து வந்திருக்கிறார்.  கடந்த 2019 ஆம் ஆண்டில் தந்தைக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதால் அவர் திடீரென்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதால் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார்.  ஆனால் சிறுமியின் சித்தப்பா தாமோதர சாமி மகளை தான் பார்த்துக் கொள்வதாக உத்தரவாதம் அளித்திருக்கிறார்.

p

 சித்தப்பா உறவு முறை என்பதால்  நம்பி சிறுமி அவர் வீட்டில் தங்க உறவினர்கள் அனுமதித்திருக்கிறார்கள்.   கடந்த 2019 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 18ம் தேதி அன்று இரவு தூங்கிக் கொண்டிருந்த போது அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்   . நடந்ததை வெளியே சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டி இருக்கிறார்.    இதில் சிறுமி கர்ப்பம் அடைந்திருக்கிறார்.

அந்த சிறுமிக்கு  ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.   சித்தப்பாவால் கர்ப்பமடைந்து சிறுமி ஆண் குழந்தை பெற்றது சர்ச்சையாக மாறியிருக்கிறது.  பலர் அளித்த ஊக்கத்தின் பேரில் பேரூர் அனைத்து மகளிர் போலீசில் சிறுமி புகார் அளிக்க,  அவரின் சித்தப்பா தாமோதரசாமியின் மீது போக்சோ மற்றும் கொலை மிரட்டல் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். 

 இந்த வழக்கில் விசாரணை கோவை நீதிமன்றத்தில் நடந்து வந்தது.  விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது . சிறுமியை கர்ப்பமாக்கிய சித்தப்பா தாமோதர சாமிக்கு போக்சோ வழக்கின் கீழ் 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பளித்துள்ளார் நீதிபதி குலசேகரன்.