"பாயாசம் வைத்து ,அதில் பாய்சன் வைத்து.." -குடும்பத்தையே ஒரு டீனேஜ் பெண் கொலை செய்ய காரணம் என்ன தெரியுமா ?

 
girl murder her family by poison

உணவில் விஷம் கலந்து கொடுத்து குடும்பத்தினர் அனைவைரையும் கொலை செய்த 17 வயதான பெண்ணை போலீஸ் கைது செய்தது 

poison
கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவின் இசாமுத்ரா கிராமத்தில் லம்பானிஹட்டியில் வசிக்கும் திப்பா நாயக் - சுதாபாய் ஆகிய தம்பதியின்  இரண்டாவது மகளான, 17 வயது பெண்ணொருவர் தனது  13வது  வயது வரை ஹொல்கரேவின் ஐனள்ளியில் உள்ள பாட்டி வீட்டில் வளர்ந்தார்.பின்னர் அவர் எட்டாம் வகுப்பு படிப்பதற்காக, இசாமுத்ராவில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்தார். ஆனால்  அவரின்  பெற்றோர் மகளின் படிப்பை நிறுத்திவிட்டு அவரை கூலி வேலைக்கு அனுப்பினர்.
அந்த பெற்றோர் அவர்களின் மற்ற பிள்ளைகளான ரம்யா, ராகுல் மீது காண்பித்த அன்பை, தன் மீது காண்பிக்கவில்லை என மனம் வருந்திய சிறுமி, தன் குடும்பத்தையே கொலை செய்ய திட்டமிட்டார்.
அவரின் திட்டப்படி அவர் முதலில் மீன் குழம்பில் விஷம் கலந்தார். அது தோல்வியில் முடிந்தது. பிறகு கடந்த ஜூலை 12ம் தேதி  இரவு, அந்த பெண் கேழ்வரகு பாயாசம் தயாரித்து ,அதில் பாய்சன் கலந்து அனைவருக்கும் சாப்பிட கொடுத்தார் .அந்த  விஷ உணவை தின்றதில் திப்பா நாயக், , அவரது மனைவி சுதாபாய், , தாய் குந்தி பாய், மற்றும் 16 வயதான மகள்  ரம்யா ஆகியோர் உயிரிழந்தனர். 19 வயதான மகன் ராகுல்,சிகிச்சை பெற்று வருகிறார் ..
இது குறித்து, விசாரணை நடத்திய போலீசார், நால்வரின் இறப்புக்கு காரணமான அந்த 17 வயது சிறுமியை, கைது செய்து சிறுவர் சீர்திருத்த மையத்தில் ஒப்படைத்தனர்


.