"பகலில் கோவிலில் தாலி ,இரவில் லாட்ஜில் ஜாலி.." -மாணவியை ஏமாற்றி நடந்த பலாத்காரம்

 
marriage

16 வயதான பெண்ணை சமூக ஊடகம் மூலம் பழகி அவரை பலாத்காரம் செய்த வாலிபரை போலீஸ் கைது செய்தது 

rape
 சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராம் என்பவரின் 16 வயதான மகள் அங்குள்ள ஒரு பள்ளியில் படிக்கிறார் அந்த ,பள்ளி மாணவிக்கு பேஸ்புக் மூலம் ஆந்திர மாநிலம் சித்துரை சேர்ந்த 22 வயதான சந்தோஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிய சந்தோஷ், அவரை மதுரைக்கு கடத்தி சென்றார் 

பிறகு மாணவியை கடத்தி சென்ற சந்தோஷ், அவரை ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்துகொண்டு, பின்னர், ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கி, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார் .இந்நிலையில் மகளை காணாத அந்த தந்தை போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து , சந்தோஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பிறகு அந்த மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.