"மாணவியை கட்டி வைத்து மிருகம் போல மாறி மாறி .." ரஷ்ய வீரர்களால் சீரழிக்கப்பட்ட சிறுமி கர்ப்பமான கொடுமை
ஐந்து ரஷ்ய வீரர்களிடம் சிக்கிய 14 வயது மாணவியை அவர்கள் பலாத்காரம் செய்ததால் அந்த சிறுமி இப்போது கர்ப்பமாக இருக்கும் கொடுமை உக்ரைனில் நடந்தயுள்ளது
உக்ரைன் மீது போர் தொடுத்து அங்குள்ள பொது மக்களையும் அவர்களின் உடைமைகளையும் ரஷ்ய ராணுவம் வேட்டையாடி வருகிறது ,அங்கு பல சிறுமிகள் , சிறுவர்கள் ,பெண்கள் ரஷிய ராணுவத்தினரால் பலாத்காரத்துக்கு ஆளாகும் கொடுமை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டு வருகிறது .இது பற்றி வெளியாகும் தகவல் பலரின் இதயத்தினை நொறுக்குகிறது
உக்ரேனிய நாடாளுமன்ற உறுப்பினர் லிசியா வசிலெங்கோ சமீபத்தில் வெளியுட்டுள்ள தகவலில் . உக்ரைனின் புச்சா நகரில் வசிக்கும் 14 வயது சிறுமி 5 ரஷ்ய வீரர்களால் பலாத்காரம் செய்யப்பட்டதால் அவர் தற்போது கர்ப்பமாக உள்ளார் என்ற அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார் .மேலும் உக்ரைனை சேர்ந்த
இர்பின் நகரிலும் 20 வயதான இளம்பெண் மூன்று ரஷ்ய வீரர்களால் சீரழிக்கப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளார்
உக்ரைன் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் லிசியா உக்ரைனில் பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.