"வீட்டுக்கு போகணும் என்னை விடுங்க ஃபாதர் "-சர்ச்சில் சைக்கிள் ஓட்டி கொண்டிருந்த சிறுமிக்கு நேர்ந்த கொடுமை
உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் 11 வயது சிறுமியை தேவாலய பாதிரியார் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததால் கைது செய்யப்பட்டார்
உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் உள்ள சண்டிநகர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் பாதிரியார் ஆல்பர்ட் என்பவர் வசித்து வந்தார் .
அந்த தேவாலயத்துக்குள் 11 வயதான பெண்ணொருவர் சைக்கிள் ஓட்டுவதற்காக கடந்த சனிக்கிழமை சென்றபோது, பாதிரியார் ஆல்பர்ட்,அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக அந்த சர்ச்சுக்குள் கூட்டி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்
அவர் மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பின்னர், இந்த விஷயத்தை வெளியே சொன்னால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சிறுமியை மிரட்டியுள்ளார். இருப்பினும், சிறுமி வீட்டிற்கு வந்ததும், தனது பெற்றோரிடம் நடந்த கொடுமையை விவரித்துள்ளார் .அதை கேட்டு அதிர்ச்சியான அந்த சிறுமியின் தாய் அந்த பாதிரியார் மீது போலீசில் புகார் கொடுத்ததும் ,போலீசார் அந்த பாதிரியார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்