"உடலுறவுக்கு பின் முத்திரையுடன் கிடக்கும் சிறுமிகளின் உடல்கள்"-ராட்சசன் போல அலையும் ரஷிய ராணுவம் .

 
ukrain


உக்கிரைனில் 10 வயதுக்கும் குறைவான சிறுமிகளைக் கூட ரஷ்ய வீரர்கள் வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது .

Image
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து உக்கிரமாக போர் நடத்தி வருகிறது .இந்நிலையில் ரஷ்ய ராணுவத்தினர் அந்த உக்ரைன் நாட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பெண்களையும் ,சிறுமிகளையும் பலாத்காரம் செய்து வருவது பலரது இதயத்தினை உறைய செய்துள்ளது 
மேலும் பலாத்காரம் செய்யப்பட்ட பிறகு கொடூரமாக கொல்லப்பட்ட சிறுமிகள் உடல்களில் ஸ்வஸ்திகா முத்திரையில் தீக்காயங்கள் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில், 10 வயதுக்கும் குறைவான சிறுமிகளைக் கூட ரஷ்ய வீரர்கள் வன்புணர்வு செய்ததாகவும் பெண்களின் உடல்களில் தீக்காயங்களை ஏற்படுத்தும் வகையிலான நாஜி முத்திரையைக் குத்தியதாகவும் உக்ரைன் எம்பி லெசியா வாசிலென்க் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்நிலையில் கொல்லப்பட்ட பல சிறுமிகளின் உடல்களில் ஸ்வஸ்திகா முத்திரை போன்ற வடிவில் தீக்காயங்கள் இருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது. அதன்படி ஹொஸ்டோமல் நகரில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமி உடலில் ஸ்வஸ்திகா முத்திரையில் தீக்காயங்கள் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்த வாசிலெங்க் பதிவில், ரஷ்ய வீரர்கள் உக்ரைனில்  உக்கிரமாக செயல்ப்ட்டு ,கொலை கொள்ளை போன்றவற்றை செய்து வருகின்றனர் .மேலும் ராட்சச குணத்துடன் பத்து வயதுக்குட்பட்ட சிறுமிகளை கூட விடாமல் பலாத்காரம் செய்து அக்கிரமம் செய்து வருகின்றனர் ,இது ரஷ்ய வீரர்களை அவர்கள் வளர்ந்து வந்த மோசமான குணத்தை காமிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார் .