"கல்யாண மாப்பிள்ளைக்கு காரியம் பண்ண வச்சிட்டிங்களே " -பேச்லர் பார்ட்டியில் மணமகனுக்கு நடந்த சோகம்

 
marriage

பேச்லர் பார்ட்டியில் மணமகணை அடித்து கொலை செய்த மூன்று நண்பர்களை போலீஸ் தேடி வருகிறது 

beer
 ஒடிசா மாநிலம்  புவனேஸ்வரில் ,மூத்த பத்திரிகையாளர் நவீன் தாஸின் மகன் மணீஷ் அனுராக் என்ற 28 வயதான வாலிபர் வசித்து வந்தார் .அவருக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது .அதனால் அவரின் மூன்று  நண்பர்கள்  அம்ரித் ப்ரீதம் பிஸ்வால், தினேஷ் மொஹாபத்ரா என்ற லிது மற்றும் முருத்யா ஆகியோர் அந்த மாப்பிள்ளையிடம் பார்ட்டி கேட்டனர் .
அதனால் அந்த மணீஷ் கடந்த 10 ம் தேதி அங்குள்ள ஒரு ஹோட்டலில் மது விருந்துக்கு ஏற்பாடு செய்தார் .அப்போது அவரின் அந்த மூன்று நண்பர்களோடு அந்த மனிஷும் சேர்ந்து மது அருந்தி விட்டு உணவு உண்டார் .அதன் பிறகு அதற்கான பில் தொகை 8000 ரூபாய் வந்தது .அதை பார்த்து அதிர்ச்சியான அந்த மணீஷ் தன்னிடம் அவ்வளவு பணமில்லையே என்று கூறினார் .இதனால் கோபமுற்ற அந்த மற்ற மூன்று நண்பர்கள் அவரோடு வாக்கு வாதத்தில் ஈடுபட்டு சண்டை போட்டார்கள் .அந்த தகராறால் அந்த மணீஷ் தன்னுடைய தாயாருக்கு போன் செய்து பணம் அனுப்பிவைக்க சொன்னார் .அதற்குள்  அந்த நண்பர்கள் அந்த மணீஷை குடி போதையில் அடித்து உதைத்து கொலை செய்து விட்டனர் .பின்னர் அவரின் உடலை அங்குள்ள ஒரு குளத்தில் வீசி விட்டு ஓடி விட்டனர் .பின்னர் இந்த கொலை பற்றி போலீசுக்கு அவரின் பெற்றோர் தகவல் தெரிவித்ததும்  அந்த இடத்திற்கு போலீசார் வந்தனர் . பிறகு போலீசார்  அந்த வாலிபரின்  ப்ரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .