இளம் பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் -நடிகர் சிறையிலடைப்பு
விடுதியில் தங்கியிருந்து வேலைக்குச் சென்று வந்து இளம் பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட நடிகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சின்னத்திரை நடிகர் ஸ்ரீ கணேஷ். இவர் சென்னை அம்பத்தூர் விவேக் நகர் பகுதியில் ஸ்ரீ தக்ஷனா பெண்கள் விடுதியை நடத்தி வருகிறார். இந்த பெண்கள் விடுதி கீழ்தளத்தில் இயங்கி வருகிறது. மேல் தளத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் ஸ்ரீ கணேஷ்.
இந்த விடுதியில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி படித்து வருகிறார்கள். வேலைக்குச் சென்று வருகிறார்கள் . இந்த விடுதியில் வேலூரை சேர்ந்த 21 வயது இளம்பெண் தங்கி இருந்து வேலைக்கு சென்று வருகிறார். அந்த இளம்பெண்ணை அடிக்கடி பாலோவ் செய்து வந்த விடுதியின் உரிமையாளர் நடிகர் ஸ்ரீ கணேஷ் திடீரென்று அந்த பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பாலியல் தொந்தரவு அளித்திருக்கிறார். இதில் கடும் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் விடுதியின் உரிமையாளர் என்பதால் அந்த நேரத்தில் எதுவும் செய்ய முடியாமல், அதே நேரம் அவருக்கு தக்க தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்று நினைத்து சமூக ஆர்வலர் ரிகன்யா என்பவரின் மூலமாக திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடிகர் ஸ்ரீ கணேஷ்-ஐ நேற்று கைது செய்துள்ளனர். அதன் பின்னர் அம்பத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ராஜபடுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த குற்ற சம்பவத்தில் நடிகரின் நடிகர் ஸ்ரீ கணேஷ் மனைவி நித்தியலட்சுமிக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.