அடக்கொடுமையே! தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பெண் பாலியல் பலாத்காரம்

 
j

அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்தப் பெண் அரை மயக்கத்தில் இருந்த போது மருத்துவமனை ஊழியர் அவரை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.   மயக்கம் தெளிந்ததும் உறவினர்களிடம் இதைச் சொல்லி அந்தப் பெண் அழுத்திருக்கிறார்.  இதை அடுத்து போலீஸ் விசாரணை நடத்தி அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  கேரள மாநிலத்தில் கோழிக்கோடு பகுதியில் தான் நடந்திருக்கிறது இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம்.

 கேரள மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டம் மைய்யனூர் பகுதியைச் சேர்ந்தவர் சசிதரன்.  55 வயதான இந்த நபர் கோழிக்கோடு  மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார்.   இந்த மருத்துவமனையில் 36 வயது பெண் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

 அந்த பெண்ணுக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருக்கிறார்கள்.  அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அந்தப் பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.  அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள்,  செவிலியர்கள் வெளியே சென்றிருந்த நேரம் ஊழியர் சசிதரன் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.  

க்

 அறுவை சிகிச்சையில் சிகிச்சையினால் அரை மயக்கத்தில் இருந்த அந்த பெண்ணால் அப்போது எதிர்ப்பு எதுவும் தெரிவிக்க முடியாமல் இருந்திருக்கிறது.  மயக்கம் தெளிந்ததும் இது பற்றி தனது உறவினர்களிடம் சொல்லி அழுதிருக்கிறார் அந்தப் பெண்.   உடனே  உறவினர்கள் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தில் புகார் அளித்துள்ளனர்.

 இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நிர்வாகம் போலீசில் புகார் அளித்திருக்கிறது .  பின்னர் விசாரணை நடத்தி ஊழியர் சசிதரனை பிடித்து  விசாரித்த போது தான் அறுவை சிகிச்சை முடிந்து அரை மயக்கத்தில் இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார்.   இதை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் சசிதரனை கைது செய்துள்ளனர்.  பின்னர் அவரை கோழிக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிபதியின் உத்தரவை அடுத்து அவரை சிறையில் அடைத்துள்ளனர். 

 இந்த சம்பவத்தில்  கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்,  கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும்,  காவல்துறைக்கும் உத்தரவிட்டிருக்கிறார் .

அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு பெண்ணை மருத்துவமனை ஊழியர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கேரள மாநிலத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன.