கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவியை கண்ட கணவன்! அதன்பின் நடந்த விபரீதம்

 
murder

செங்கல்பட்டு அருகே கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவியை கண்ட கணவன், அவர்கள் இருவரையும் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

50-க்கும்.. 31க்கும்.. இடையே கள்ளக்காதல் "தொடர் உல்லாசம்" இறுதியில் சடலமாக  மீட்கப்பட்ட கள்ளக்காதலி?

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் சந்திராணிகுளம் இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி(32). இவர் மறைமலைநகர் பகுதியில் பூக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் பார்வதி (31), என்பவரை பத்தாண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகளும், 10 வயதில் 1 மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு  கோவிந்தசாமி தன் மனைவி மற்றும் பிள்ளைகளோடு மறைமலைநகர் சந்திரராணி குளம் பகுதியில் வசித்து வந்துள்ளார். 

இதற்கிடையில் பார்வதிக்கும், கோவிந்தசாமியின் நண்பர் பாரதிதாசனுக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டோம், புகைப்படத்தை அனுப்பி கொண்டும் இருந்துள்ளனர். இந்த விவகாரம் கோவிந்தசாமிக்கு தெரிந்து மனைவியை பலமுறை கண்டித்துள்ளார்.  பார்வதி கள்ளக்காதலை விடமுடியால் கோவிந்தசாமியை விட்டு பிரிந்து தனது அம்மா வீட்டில் கூடுவாஞ்சேரி அடுத்த காயியரம்பேடு குட் வில் நகரில் பிள்ளைகளுடன் கடந்த ஒரு வருடம்  காலமாக தனியாக வாழ்ந்து வருகிறார். கோவிந்தசாமியின் நண்பர் பாரதிதாசன் அதே பகுதி என்பதால் பார்வதியும் பாரதிதாசனும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்

காயிரம்பேட்டில் காயிரம்பேட்டில் உள்ள தன் மனைவி மற்றும் பிள்ளைகளை பார்க்க  திடீரென வந்தபோது பார்வதியும் பாரதிதாசனும் உல்லாசமாக இருப்பதை நேரடியாக பார்த்ததும் ஆத்திரமடைந்த பார்வதியின் கணவர் கோவிந்தசாமி பார்வதியையும் கள்ளக்காதலன் பாரதிதாசனயும் அருகில் கருந்த கட்டையால் சரமாரியாக தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் வருவதை கண்ட கோவிந்தசாமி தப்பியோடிவிட்டார். அக்கம்பக்கத்தினர் கூடுவாஞ்சேரி காவல்நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்து தப்பியோடிய கோவிந்தசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படுகாயமடைந்த இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.