"எந்நேரமும் பியூட்டி பார்லரிலேயே இருக்கியே.."மனைவியால் காண்டான கணவனால் பார்லரில் நடந்த பயங்கரம்.

 
hus wife

எந்நேரமும்  'பியூட்டி பார்லர்' க்கு  போன மனைவி முகத்தில்,  தீ வைத்த கொடூர கணவனை போலீசார் கைது செய்தனர்.

fire

புதுச்சேரி, வில்லியனுார் அடுத்த கொம்பாக்கத்தைச் சேர்ந்த 36 வயதான  கணேசன் ஒரு  கார் டிரைவராக வேலை பார்க்கிறார் .இவரது மனைவி 35 வயதான அழகுமீனா, புதுச்சேரியில் உள்ள  பியூட்டி பார்லரில் அழகு கலை நிபுணராக வேலை செய்து வந்தார்.கணேசன் வேலை விட்டு வரும்போதெல்லாம் அந்த மீனா எந்நேரமும் பியூட்டி பார்லரிலேயே இருந்ததால் அந்த கணவன் மிகவும் கோவப்பட்டார் .அதனால் இனி அந்த பியூட்டி பார்லருக்கு போக கூடாது என்று கண்டித்தார் .
ஆனால் அந்த மீனா அவரின் பேச்சை கேட்காமல் அந்த பியூட்டி பார்லருக்கு போய் ,குடும்பத்தை கவனிக்காமல் இருந்தார் .இதனால் ஊருக்குள் அந்த கணேசனிடம் இது பலர் கேட்டு அவரை வெறுப்படைய  வைத்தனர் .அதனால் கோவப்பட்ட கணேசன் சில நாள் முன்பு ஒரு பெட்ரோல் பாட்டிலை எடுத்து கொண்டு மீனாவை  தேடி வந்தார் .அப்போதும் அவர் பியூட்டி  பார்லரில் இருந்ததால் நேராக அங்கே சென்று அந்த மீனாவின் முகத்தில் அந்த பெட்ரோலை  ஊற்றி தீ வைத்து கொளுத்தினார் .உடேன தீயில் எரியும் அந்த மீனாவை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்கு ஹாஸ்ப்பிட்டலில் சேர்த்தனர் .கணேசன் பியூட்டி பார்லருக்கு பெட்ரோல் பாட்டிலுடன் வரும் வீடியோ காட்சி, சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.இது பற்றி போலீசார் வழக்கு பதிந்து கணவர் கணேசனை கைது செய்தனர்