"போற இடத்துலெல்லாம் ஒரு பொண்ணை பிக் அப் பண்றியே" -கணவனால் காண்டான மனைவிக்கு நேர்ந்த சோகம்

 
love

பல பெண்களுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததை தட்டிக்கேட்டதால், மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

murder
தமிழகத்தின்  புரசைவாக்கம் பகுதியை சேர்ந்தவர் 33 வயதான  வினோத்குமார் ஒரு  தனியார் நிறுவன ஊழியர் ஆவார் . இவர் ஹேமாவதி என்ற பெண்ணை ஆறு வருடங்களுக்கு முன்பு கல்யாணம் செய்து கொண்டு அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது .இந்நிலையில் அந்த வினோத்குமாருக்கு அவரின் உறவுக்கார பெண்ணோடு கள்ள தொடர்பு இருந்ததாக அந்த மனைவிக்கு சந்தேகம் இருந்துள்ளது .இதனால் அவர்கள் குடும்பத்தில் அடிக்கடி  சண்டை வந்துள்ளது .
மேலும் அந்த நபருக்கு அவர் வேலை பார்க்கும் ஆபீஸிலும் சில பெண்களுடன் கள்ள தொடர்பு இருந்ததை அந்த மனைவி கண்டுபிடித்தார் .இதனால் மனம் வெறுத்த அந்த பெண் அவருடன் இனி வாழ முடியாது என்று முடிவு செய்து விட்டு விவாகாரத்துக்கு மனு செய்து  விட்டு தன்னுடைய தாயார் வீட்டிற்கு போய் விட்டார் .
 பிறகு அந்த வினோத் குமார் திடீரென்று அவரின் மனைவியிடம்  தான் திருந்தி வாழ முடிவு செய்து  விட்டதாக பொய் சொல்லி மனைவியை  தன்னுடன் கூட்டி சென்றார் .ஆனால் அந்த அதன் பிறகும் அவர் பல பெண்களுடன் கள்ள தொடர்பை தொடர்ந்துள்ளார் .பின்னர் இதை தட்டிக்கேட்ட மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டார் .பிறகு போலீசார் விசாரணை செய்து  மனைவியை கொன்ற வினோத்குமாரை கைது செய்தனர்