"சம்சாரத்தோடு சந்தோஷமாக வாழ முடியவில்லையே.."இளம் பெண்ணை திருமணம் செய்த முதியவரின் கதி

 
old

இளம்பெண்ணை திருமணம் செய்த 45 வயது நபர் அவர் கர்ப்பமானதும் தவிக்க விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது  marriage
கர்நாடக மாநிலம் துமகூரின் ஹுலியாரு அருகே உள்ள அக்கிமரி கிராமத்தை சேர்ந்த45 வயதான  சங்கரப்பாவுக்கும், 25 வயதான மோகனா என்பவருக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்  திருமணம் நடந்தது. மோகனா ஏற்கனவே திருமணமாகி கணவனை பிரிந்தவர். இந்நிலையில் இவர்கள் 2 பேருமே திருமணம் முடிந்ததும் சந்தோஷமாகவே மணவாழ்க்கையை ஆரம்பித்து,மகிழ்ச்சியுடனே வாழ்ந்தும் வந்துள்ளனர்.இப்போது மேகனா 4 மாத கர்ப்பமாக இருக்கிறார்.கடந்த சில தினங்களாகவே, மேகனாவுக்கும், சங்கரண்ணாவின் அம்மாவுக்கம் அடிக்கடி தகராறு வந்துள்ளது.இதனால் மேகனா, சங்கரண்ணாவிடம் மைசூரு அல்லது பெங்களூரு ஏதாவது ஒரு இடத்துக்கு சென்று தனிக்குடித்தனம் நடத்தலாம் என்று சொல்லி உள்ளார்.ஆனால் அந்த கணவர் தன்னுடைய தாயை பிரிந்து தனியாக வர விரும்பவில்லை .
இதனால் தாய்க்கும் தாரத்திற்கும் நடுவே சிக்கிக்கொண்டு அந்த சங்கரண்ணா நிம்மதியில்லாமல் தவித்து வந்தார் .இந்நிலையில் இல்லற வாழ்வில் சந்தோஷமாக வாழ முடியவில்லையே என்ற விரக்தியில் கர்ப்பிணி மனைவியை தவிக்க விட்டு தற்கொலை செய்து கொண்டார் .
பின்னர் இதை தற்கொலை பற்றி போலீசார் அந்த சங்கரண்ணாவின் தாயிடமும் மனைவியிடமும் விசாரித்து போது ,இருவரும் மாறி மாறி அடுத்தவர்  மீது குற்றம் சுமத்தி வருகின்றனர்  .