"எனக்கு பொண்டாட்டியா இரு ,எங்க அப்பாவுக்கு வைப்பாட்டியா இரு" -மனைவியை டார்ச்சர் செய்த கணவன்

 
rape

மாமனாரோடு உறவு கொள்ள பெண் என்ஜினீயருக்கு தொல்லை கொடுத்த கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

பெங்களூரு அனுமந்தநகர்  பகுதியில் வசித்து வரும்  29 வயது இளம்பெண், அங்குள்ள சாப்ட்வேர் கம்பெனியில் என்ஜினீயராக    பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அந்த இளம்பெண்ணுக்கும், ஞானபாரதி பகுதியை  சேர்ந்த தீபக் என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு  திருமணம் நடந்தது. 
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அந்த தீபக்,அவரது தந்தை கெம்பனராசிமய்யா, தீபக்கின் சகோதரர் ரக்‌ஷக், சகோதரி அனிதா, தீபக்கின் அத்தை ஹேமா ஆகியோர் அந்த பெண்ணிடம்  மேலும்  வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தனர் . ஆனால் கூடுதல் வரதட்சணை வாங்கி வர அவர் மறுத்து விட்டார்.

கன்னித்தன்மையை பரிசோதிக்க கூறி பெண் என்ஜினீயருக்கு தொல்லை

மேலும் தீபக்கின் தந்தை அந்த மருமகளிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார் .இது பற்றி அந்த பெண்  தீபக்கிடம் கூறியபோது ,அவர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் தனது தந்தை மட்டுமல்லாமல் மேலும் சில நண்பர்களிடமும் உறவு கொள்ள வற்புறுத்தியுள்ளார் .மேலும் அவரின் கன்னி தன்மையை சோதிக்க வேண்டுமென்றும் கூறினார் .இதனால் அந்த பெண் மிகவும் மனம் வெறுத்து அந்த கணவர் மற்றும் அவரின் உறவினர்கள் மீது போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார்  வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர் .