மனைவி விரித்த வலையில் சிக்கிய கணவன் - தினமும் ஆபாசமாக பேசி உல்லாசம் அனுபவிக்க சென்றபோது அதிர்ச்சி

 
l

 இன்ஸ்டாகிராம் மூலம் மனைவி விரித்த வலையில் எதிர்பார்த்தது போலவே சிக்கியிருக்கிறார் கணவன்.  அதன் பின்னர் தினமும் ஆபாசமாக பேசி மயக்கி உல்லாசம் அனுபவிப்பதற்காக சொகுசு  விடுதிக்கு சென்ற போது கணவனுக்கு காத்திருந்திருக்கிறது அந்த அதிர்ச்சி.

 தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த அருண் ஜோஷி என்கிற இளைஞர் சென்னை அடையாறு பகுதியில் சில காலம் தங்கியிருந்து வேலை செய்து வந்திருக்கிறார். அப்போது அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். 

 திருமணத்திற்குப் பின்னர் கடந்த மே மாதத்தில் பக்ரைன் நாட்டிற்கு வேலைக்காக சென்றிருக்கிறார்.  வீட்டில் இருந்த மனைவி  ஒருநாள் எதார்த்தமாக கணவனின் கம்ப்யூட்டரை பயன்படுத்தி இருக்கிறார்.  அப்போது பல பெண்களின் ஆபாச படங்கள் -வீடியோக்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.  அது மட்டுமல்லாமல் கணவன் வெளிநாட்டில் இருந்தபடியே தமிழ்நாட்டில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்ததும் தெரிய வந்திருக்கிறது.

சு

அதிர்ச்சிக்குள்ளான அந்த இளம்பெண் தன் கணவரை இப்படியே விட்டுவிடக்கூடாது தன்னையும் ஏமாற்றி எத்தனையோ பெண்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் அவரை எப்படியாவது போலீசில் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறார். 

 இதையடுத்து போலீசாரிடம் சென்று புகார் அளித்திருக்கிறார் . அதன் பின்னர் போலீசார் சொன்னபடியே செய்து வந்திருக்கிறார்.   இன்ஸ்டாகிராமில் போலியாக ஒரு பக்கத்தை துவங்கி தனது கணவருடன் பேசி வந்திருக்கிறார்.  இளம் பெண் ஒருவர் தன்னிடம் பேசுவதாக நினைத்துக் கொண்டு அவரிடம் தினமும் ஆபாசமாக பேசி வந்துள்ளார் அருண் . 

பின்னர்  அவருடன் உல்லாசம் அனுபவிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.  அதற்கும் இளம்பெண் ஓகே சொல்ல , பாலியல் தொழிலில் ஈடுபட்டால் பெரிய பணக்காரர் ஆகிவிடலாம் என்று ஆசை வார்த்தைகள் கூறி இருக்கிறார்.  இதனால் பஹ்ரைனில் இருந்து புறப்பட்டு வந்து சென்னைக்கு வந்து இருக்கிறார்.

 அந்த இளம்பெண்ணை ஒரு சைஸ் வீட்டிற்கு வரவழைத்து விட்டு அங்கேயே தானும் சென்றிருக்கிறார். அருண் அந்த சொகுசு விடுதியில் அறை கதவை திறந்து பார்த்தால்  ஒரே அதிர்ச்சி.  அங்கே அமர்ந்திருந்த இளம்பெண் தன் மனைவி என்பதை அறிந்து அவர் முதலில் ஒன்றுமே புரியாமல் குழப்பத்தில் இருந்திருக்கிறார். பின்னர்தான் தெரிய வந்திருக்கிறது, இன்ஸ்டாகிராமில் தன்னுடன் இத்தனை நாளும் பேசிக்கொண்டிருந்தது தன் மனைவி என்று. 

 அதுகுறித்து மனைவியிடம் அவர் வாதம் செய்து கொண்டிருந்த போது, மறைந்திருந்த போலீசார் உள்ளே நுழைந்து அவனை கைது செய்து விட்டார்கள்.  இது மாதிரி எத்தனை இளம் பெண்களை ஏமாற்றி வந்திருக்கிறான் என்பது குறித்து போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி விடுகின்றார்கள்.