"இன்னொருத்தி புருஷனோடு வாழ விடாத இந்த உலகில் நாங்கள் வாழணுமா ?"-அடுத்து அதிரடி முடிவெடுத்த கள்ள காதலர்கள்

 
affair

ஊர் மக்கள் எதிப்பால் விரக்தியான கள்ளக்காதல் ஜோடிகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

affair
தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள பழையாபுரத்தில் வசிக்கும் 41 வயதான  பன்னீர்செல்வத்துக்கும்  , எம்.துரைச்சாமிபுரம் பாரைப்பட்டி மணிகண்டன் மனைவி 32 வயதான ராமலட்சுமிக்கும் கள்ள காதல் உண்டானது .அந்த பன்னீர்செல்வத்துக்கு திருமணமாகி 20 ஆண்டாகிறது,ஆனால் குழந்தைகள் இல்லை. அவரின் கள்ள காதலி ராமலட்சுமிக்கு 15 வயதில் மகன், 13 வயதில் மகள் உள்ளனர். ராமலட்சுமி பாரைபட்டியில் குடியிருந்தபோது,அவரின்  வீட்டருகே வசித்த பன்னீர்செல்வத்துடன் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் பத்தாண்டுகளுக்கு முன் 13 நாட்கள் தலைமறைவாயினர். பின் இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தி அவரவர் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
இதனால் ராமலட்சுமியின் கணவர்  மணிகண்டன் அவரை விளாம்பட்டிக்கு  அழைத்து சென்றார்.ஆனால் எம்.துரைச்சாமிபுரம் அருகே மணிகண்டனின் சகோதரர் வீடு கட்டி வந்த நிலையில், தம்பியை பார்ப்பது போல அங்கும் அவரின் காதலன் அவரை தேடி வந்தார் . இதனால் ராமலட்சுமிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் மீண்டும் தொடர்பு ஏற்பட்டது. அதனால் அவர்களின் இந்த உறவுக்கு எதிர்ப்பு நிலவியதால் மார்ச் 11 முதல் இருவரும் மாயமாயினர். இதன் பிறகு இரு குடும்பத்தினரும் அவர்களை தேடி வந்த நிலையில், அவர்கள் ஒரு தனியார் பிளாட்டில்  விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டு கிடந்தனர். இது பற்றி  போலீசார் வழக்கு பதிந்து  விசாரித்து வருகின்றனர் .