"என்னால குடிக்க முடியலை என்னை விடுங்கடா "கதறிய மாணவன்-சீனியர்கள் குடிக்க சொன்னது எதை தெரியுமா ?

 
school

ஒரு ஜூனியர் மாணவனை  சீனியர்களின்  சிறுநீரை ஊற்றி குடிக்க சொன்ன கொடுமை நடந்துள்ளது 

iStock-1296629438
குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் வஸ்த்ராபூர் பகுதியில் ஒரு ஆங்கில   பள்ளி உள்ளது .அந்த பள்ளியில் பல 12ம் வகுப்பு மாணவர்கள் ஆண்டு இறுதி விழா கொண்டாடினார்கள் ,அந்த கொண்டாட்டத்தின் போது அவர்கள் அதே பள்ளியில்  படித்த ஒன்பதாம் வகுப்பு மாணவனை பிடித்து அந்த பள்ளியின்  டாய்லெட்டுக்குள் இழுத்து சென்றனர் .பின்னர் அந்த மாணவர்கள் சிறுநீரை பிடித்து அந்த 9ம் வகுப்பு மாணவரின் வாயில் ஊற்றி குடிக்க வைக்க முயற்ச்சித்தார்கள் .,அப்போது அந்த சிறுவன் தன்னை விடுமாறும் கெஞ்சி விட்டு அங்கிருந்து தப்பி வந்து விட்டார் 
இதனால் அந்த சிறுவன் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இது பற்றி தன் பெற்றோரிடம் கூறினார் ,அதை கேட்டு அதிர்ச்சியான அவர்கள் அந்த பள்ளி மாணவர்கள் மீது ப்ரின்சிபாலிடம் புகார் கொடுத்தார் .ஆனால் அந்த பள்ளி நிர்வாகத்தினர் இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று மறுத்து அந்த பெற்றோரை வெளியே போக சொன்னார்கள் .இதனால் அந்த மாணவரின் பெற்றோர் அங்குள்ள போலீசில் புகார் கொடுத்தனர் .போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்