10 பேர் கொண்ட கும்பலுடன் சேர்ந்து 4 பெண்களை ஏமாற்றிய கல்யாண மன்னன்

 
f

தந்தை, தங்கைகள் மற்றும் உறவினர்கள் என்று பத்து பேருடன் சேர்ந்து நான்கு பெண்களை அடுத்தடுத்து ஏமாற்றி திருமணம் செய்து செய்திருக்கிறார் கல்யாணம் வினோத் ராஜ்குமார்.  இந்த கல்யாண மன்னன் தற்போது போலீசில் வசமாக சிக்கியிருக்கிறார்.

 சென்னையைச் சேர்ந்த பொறியாளர் வினோத் ராஜ் குமார்.  இவர் திருமண இணையதளங்கள் மூலமாக வரன் தேடி வந்திருக்கிறார்.  தனது தந்தை, தங்கைகள் மற்றும் உறவினர்கள் 10 பேருடன் சேர்ந்து திருமண இணையதளங்கள் மூலமாக வரன் பார்த்து, பெண் பார்த்து திருமணம் செய்து இருக்கிறார் . இப்படி இரண்டு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்திருக்கிறார் வினோத் ராஜ்குமார் .

தூத்துக்குடியைச் சேர்ந்த கணவனால் கைவிடப்பட்டு விவகாரத்து பெற்ற ஒரு பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்து இருக்கிறார்.  திருமண இணையதளம் மூலமாகவே இந்த பெண்ணை திருமணம் செய்து இருக்கிறார்.  அந்த பெண்ணுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.  தூத்துக்குடியைச் சேர்ந்த அந்த பெண்ணுக்கு திருமணத்திற்கு பின்னர் தான் வினோத் ராஜ்குமார் ஒரு கல்யாண மன்னன் என்பதும்,  அவரது குடும்பத்தினர் தன்னை போலவே மேலும் இரண்டு பெண்களை ஏமாற்றி வினோத் ராஜ்குமாருக்கு திருமணம் செய்து வைத்துள்ளதும் தெரிய வந்திருக்கிறது.

j

 சென்னை பொதுப்பணித்துறையில் பணிபுரிந்து வரும் ஒரு பெண்ணை தற்போது நான்காவதாக திருமணம் செய்துள்ளவதும் அந்த பெண்ணுக்கு தெரிய வந்திருக்கிறது. தான் பாதிக்கப்பட்டதோடு மேலும் பல பெண்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை உணர்ந்த அந்தப் பெண் எதற்கு இப்படி ஏமாற்றி பெண்களை திருமணம் செய்கிறீர்கள் என்று ஆத்திரப்பட்டு சண்டை போட்டு இருக்கிறார்.  அதிலிருந்து அந்த பெண்ணுடனான தொடர்பை  துண்டித்திருக்கிறார்.  மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்திருக்கிறார் .

இதனால் அந்த பெண் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணை கொடுமை மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளார்.  இந்த வழக்கின் கீழ் விசாரணை நடத்தி வினோத் ராஜகுமாரை நேரில் ஆஜராக பல முறை போலீசார் தொடர்பு கொண்ட போதும் அவர் ஆஜராகாமல் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருக்கிறார்.  இந்த  மனு தள்ளுபடி ஆகி இருக்கிறது.

 இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பெயரில், தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்ததில் , சென்னையில் பதுங்கி இருந்த வினோத் ராஜ்குமாரை கைது செய்துள்ளனர்.  அவரிடம் நடத்திய விசாரணையில்தான்,   குடும்பத்தினர்கள்  உதவியுடன் சேர்ந்து நான்கு பெண்களை இதுவரைக்கும் ஏமாற்றி இருப்பது தெரிய வந்திருக்கிறது . இதை அடுத்து அவரை பேரூரணி சிறையில் அடைத்துள்ளனர் போலீசார்.