"காரின் பின் சீட்டில் வைத்து .."பெண் டாக்டருக்கு அவரின் காரிலேயே நடந்த கொடூரம்

 
car

பெண் டாக்டரை காரின் பின் சீட்டில் வைத்து எரித்து கொன்ற வழக்கில் அவரின்  கணவர் கைது செய்யப்பட்டார்.

காரில் பெண் டாக்டரின் எரிந்த சடலம்; 7 நாட்களுக்கு பின் கணவர் கைது

மராட்டியத்தின் நாசிக் நகரில் வசித்து வந்தவர் 35 வயதான சுவர்ணா வஜே,அங்குள்ள அரசு மருத்தவமனையில் டாக்டராக பணியாற்றி வந்துள்ளார்.அவர்  தன்  கணவர் சந்தீப் வஜேவுடன் அங்குள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்தார் .  இந்த நிலையில், கடந்த 25ந்தேதி  வேலைக்கு சென்ற அந்த பெண் டாக்டரை அன்று மாலையில் இருந்து காணவில்லை என்று அவரின் குடும்பத்தினர் போலீசில் புகாரளித்தனர்

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி அந்த பெண் டாக்டரை தேடி வந்தனர். இந்நிலையில் அன்றைய தினம் வாதிவர்ஹே பகுதியில் கார் ஒன்று அனாதையாக நிறுத்தப்பட்டு , அதில் கருகிய சடலம் ஒன்று கிடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது .  அந்த இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த சடலத்தை கைப்பற்றினார்கள் .அப்போது அது காணாமல் போன பெண் டாக்டர் சுவர்ணாவின் சடலம் என போலீசார் சந்தேகித்தனர்.  அதனால் அந்த சடலத்தை  மரபணு ஆய்வுக்கு அனுப்பியபோது ,அது  சுவர்ணாவின் சடலம்தான் என்று அங்கு  உறுதி செய்யப்பட்டது.  அடுத்து நடந்த விசாரணையில் சுவர்ணா அவரின் சொந்த காரிலேயே எரித்து கொல்லப்பட்டுள்ளதை கண்டறிந்தனர்  .
அடுத்து  தீவிர விசாரணை நடத்திய போலீசார் ஒரு வாரத்திற்கு பின்பு அவரது கணவர் சந்தீப் வஜேவை  கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.