"ரெண்டு காதலியும் பெண்டு நிமிர்த்துறாங்களே..:" -அடுத்து காதலிகள் சண்டையில் காதலனுக்கு நேர்ந்த கதி .

 
love


 
ஒரே நேரத்தில் 2 பெண்களை காதலித்த காதலன் கடல் நீருக்கு பலியானதால், இரண்டு காதலிகளையும்  சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் நடந்துள்ளது.

love

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் முன்னூர் அருகே ராணிபுரா பகுதியை சேர்ந்தவர் லியோ 29 வயதான டிசோசா.இவர்  அதேப்பகுதியை சேர்ந்த 22 வயதான அஸ்விதா என்ற பெண்ணை காதலித்து வந்தார் .இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு லியோ  டிசோசா, அதேப்பகுதியை சேர்ந்த டாக்லின் என்ற இளம்பெண்ணையும்  காதலித்துள்ளார்.  
இந்த விஷயம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அஸ்விதாவுக்கு தெரியவந்தது. 
இதையடுத்து அஸ்விதா, காதலன் லியோ டிசோசாவிடம் தன்னை மட்டும் தான் காதலிக்க வேண்டும், 2-வது காதலியை கழற்றி விடும்படி கூறியுள்ளார். மேலும் அந்த அஸ்விதா, புது காதலி டாக்லினிடம் தனது காதலனுடனான காதலை கைவிடும்படி கூறியுள்ளார். ஆனால் டாக்லின், லியோ டிசோசாவை  தான் காதலிப்பேன் என்றும், நீ வேண்டுமானால் உனது காதலை கைவிட்டு செல்லும்படியும் கூறியுள்ளார். அப்போது நடந்த வாக்குவாதத்தில்  அந்த முதல் காதலி கடலில் குதித்துவிட்டார் .உடனே அந்த காதலன் அந்த பெண்ணை கடலில் குதித்து காப்பாற்றினார் .பின்னர் கரைக்கு வந்த அந்த காதலன் டிசோசா கடல்நீரை அதிகமாக குடித்ததால் ஊயிரிழந்தார் .இதுபற்றி தகவலறிந்த போலீசார் வழக்கு பதிந்து  விசாரித்து வருகின்றனர்