"காம்பவுண்ட் சுவரேறி குதித்து காதலியை .. "நள்ளிரவில் வெறியுடன் போன காதலனுக்கு நேர்ந்த கதி

 
old love

நள்ளிரவில் காதலி வீட்டிற்கு ,அவரை தீ வைத்து கொளுத்த சென்ற காதலன் அந்த தீயில் சிக்கி பலியான சோகம் நடந்துள்ளது 

love

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் நந்தபுரம் வலையம் பகுதியை சேர்ந்த42 வயதான ரத்னேஷ் அதே பகுதியில் எலக்ட்ரீசியனாக வேலை செய்துவருகிறார்.இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார் ,அனால் அந்த பெண்ணின் வீட்டில் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பெண்ணுக்கு வேறு ஒரு வசதியான மாப்பிள்ளையை பார்த்து நிச்சயம் செய்து விட்டனர் .இதை கேள்விப்பட்ட அந்த ரத்னேஷ் அந்த காதலியின் பெற்றோரிடம் பலமுறை தனக்கே அவர்களின் மகளை கல்யாணம் செய்து கொடுக்க கேட்டதற்கு அவர்கள் மறுத்து விட்டனர் .இதனால் கோபமான  அந்த காதலன் சில நாள் முன்பு நள்ளிரவில் சுவரேறி குதித்து அந்த காதலியின் வீட்டிற்குள் சென்று அவரை தீ வைத்து கொளுத்த போனார் .அப்போது அவர் வைத்த தீயிலிருந்து அந்த காதலி உள்பட அவரின் குடும்பத்தினர் அனைவரும் தப்பி விட்டனர் ,ஆனால் அந்த தீயில் சிக்கி அந்த காதலன் இறந்தார் 
காதலியை  தீவைத்து எரித்துக்கொல்ல முயற்சித்த ரத்னேஷ் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.