"என்னை நல்லா யூஸ் பண்ணிட்டு லூசாக்கிட்டியே .." -ஏமாற்றிய காதலியால் காதலன் கதி .

 
love

பணம், நகைகளை வாங்கி விட்டு காதலி ஏமாற்றியதால் விரக்தியடைந்த காதலன் தற்கொலை செய்து கொண்டார் 

858+ Lovers Images Photo for Boyfriend & Girlfriend - WhatsappImages
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கொப்பிசெட்டிவாரி பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் ராவ். இவர் அதே கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார்.அந்த இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தபோது ,அந்த பெண் அவரிடமிருந்து லட்சக்கணக்கில் நகை ,பணம் போன்றவற்றை வாங்கியுள்ளார் .ஏற்கனவே விவாகரத்தான அந்த வாலிபர் அந்த பெண்ணை கல்யாணம்  செய்து கொள்ளலாம்  என்ற ஆசையில் அவர் கேட்டபோதெல்லாம் வாரி வாரி கொடுத்தார் .
இந்நிலையில் அவரை நன்றாக யூஸ் பண்ணி பணத்தை கறந்த பிறகு அந்த பெண் அவரை கழட்டி விட்டு விட்டார் .பின்னர் அந்த காதலன் அந்த பெண்ணை பலமுறை தொடர்பு கொண்டும் அவர் பேசாமல் இருந்துள்ளார் ,இதனால் அந்த காதலன் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளானார் .தன்னை இப்படி யூஸ் பண்ணிவிட்டு லூசாக்கி அலைய விட்டுட்டாரே  என்று வேதனை பட்டார் .பிறகு வாட்ஸ் அப்பில் நண்பர்களிடம் தான் சாக போவதாக கூறிவிட்டு தற்கொலை செய்து கொண்டார் .இந்த தற்கொலை பற்றி தகவலறிந்த  போலீசார் வழக்கு பதிந்து  விசாரித்து வருகின்றனர்