"போதை பொருட்களை பொத்தி பொத்தி கொண்டு வந்த பெண் ..." -போதையால் பாதை மாறிய காதலி

 
drugs

காதலனுக்காக ஒரு காதலி போதை மாத்திரைகளை கடத்திய தகவவை அறிந்த போலீசார் காதல் ஜோடிகளை கைது செய்தனர்.

drug heroin
தெலுங்கானாவின் ஐதராபாத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்தார் ,அந்த காதலன் ஹேமந்த் அந்த காதலியிடம் போதை பொருட்களை கடத்தி வந்தால்தான் கல்யாணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார் .மேலும் பெண்கள் கடத்தினால் சந்தேகம் வராது என்று கூறியுள்ளார் .அதனால் அந்த பெண் தன்னுடைய காதலன் ஹேமந்த் குமாருக்காக போதை மாத்திரைகள் மற்றும் போதை மருந்து ஆகியவற்றை விமானம் மூலம் பொத்தி பொத்தி வச்சி கொண்டு வந்தார் இந்நிலையில் ஒரு பெண் போதை பொருளை கடத்துவதாக விசாகப்பட்டினம் விமான நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 
அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் விமான நிலையத்திற்கு வெளியே சற்று தொலைவில் அந்த பெண்ணை பிடிப்பதற்காக காத்திருந்தனர். அப்போது காரிலிருந்து அந்த பெண், இறங்கும்  போது, அதே பகுதியில் தயாராக காத்திருந்த ஹேமந்த் குமார் அந்த பெண்ணிடம் இருந்த 2 கிராம் NAD போதை மருந்து மற்றும் NDMAX போதை மாத்திரைகள்  ஆகியவற்றை பெற்றுக்கொண்டார்.
அப்போது தயாராக காத்திருந்த போலீசார் 2 பேரையும் பிடித்து கைது செய்து அவர்களிடமிருந்து போதை மருந்து மற்றும் போதை மாத்திரைகள் ஆகியவற்றை கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.
இளம்பெண் ஒருவர் ஹைதராபாத்திலிருந்து போதை மருந்து மற்றும் போதை மாத்திரைகள் ஆகியவற்றை வாங்கி விசாகப்பட்டினம் கடத்தி வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.