"நான் மனைவியை பிரிஞ்சவன் ,நீ புருஷனை பிரிஞ்சவ அதனால" -டீல் போட்ட உறவால் ஃபீல் பண்ணும் காதலர்கள்
கள்ள காதல் தகராறில் காதலர்கள் இருவரும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது .
தமிழகத்தின் சென்னை பெரியமேடு அடுத்த சூளை நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 40 வயதான சந்தீப் ஜெயின் என்பவர் வசித்து வந்தார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவர், கடந்த 6 ஆண்டுகளாக இளைச்சி என்ற பெண்ணுடன் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தார். சந்தீப் ஜெயினுக்கு ஏற்கனவே திருமணமாகி, மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்ததும், அதேபோல் இளைச்சியும் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்ததால் , இவர்களுக்குள் ஏற்பட்ட உறவால் , இருவரும் ஒரே வீட்டில் திருமணம் செய்து கொள்ளாமல் ஆறு வருடமாக ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் அந்த பெண்ணுக்கு ஹைதராபாத் வாலிபருடன் காதல் ஏற்பட்டு அவரை திருமணம் செய்ய முடிவெடுத்தார் .இந்த விஷயம் கேள்விப்பட்ட அந்த சந்தீப் ,தன்னை விட்டு பிரிய கூடாது என்று அந்த பெண்ணுடன் சண்டை போட்டார் .ஆனால் அந்த பெண் அவரை விட்டு போக முடிவெடுத்ததால் இருவருக்கும் தகராறு ஏற்ப்பட்டதில் , அந்த பெண் தீ வைத்து கொளுத்தி கொண்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சந்தீப் ஜெயினும், தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றதால் அவர் அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சை பெற்று வருகிறார் . .இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.