"ஜாலியாயிருந்த வீடியோவை காமித்து சோலியை முடிச்சி ..."கல்யாணமான பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
காதலிக்கு திருமணமான பிறகு அவரின் முன்னாள் காதலன் உல்லாசமாயிருந்த வீடியோவை காமித்து உல்லாசம் அனுபவித்ததால் அவர் கைது செய்யப்பட்டார்
சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணும், புழல் காவங்கரை பகுதியை சேர்ந்த சாம்சன் ராஜ் என்ற வாலிபரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்தனர் .அப்போது அந்த சாம்சன் அந்த காதலியுடன் உல்லாசமாக இருந்துள்ளார் .அப்போது ரகசியமாக அந்த பெண்ணுக்கு தெரியாமல் அவர்கள் உல்லாசமாயிருப்பதை வீடியோ எடுத்து வைத்துள்ளார் .
இதன் பின்னர் அந்த காதலிக்கு திருமணமானதும் ,அந்த சாம்சன் அப்பெண்ணை தொடர்புகொண்டு ,அவர்களின் உல்லாச வீடியோ தன்னிடம் இருப்பதாக கூறி ,இதை சமூக ஊடகத்தில் வெளிடுவதாக மிரட்டி வீட்டுக்கு கூப்பிட்டார் .அங்கு வைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து உல்லாசமாக இருந்துள்ளார். இந்த நேரத்தில் காதலியை ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்துள்ளார்.
இதன் பின்னர் பலமுறை சாம்சன்ராஜ், போனில் தொடர்பு கொண்டு பேசி, தான் கூப்பிடும் போதெல்லாம் தனியாக வரவேண்டும் என்றும், அப்படி வரவில்லையென்றால் வீடியோவை வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். திருமணத்துக்கு பிறகும் காதலனின் தொல்லை எல்லை மீறி சென்றதால் போலீசில் இளம்பெண் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் சாம்சன் ராஜ் மீது வழக்குப்பதிவு செய்த பின்னர் சாம்சன்ராஜை கைது செய்தனர்.