"அடப்பாவி பொண்ணுங்களோட போட்டோவை வச்சி ...."ஒரு வாலிபரின் கேவலமான வேலை.

 
social media


பல  இளம்பெண்களின் போட்டோக்களை ஆபாசமாக மாற்றி அதை சமூக ஊடகத்தில் உலவ விட்ட வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர் 

arrest

தமிழகத்தின் கன்னியாகுமரியில் குமரி மாவட்டத்தில் உள்ள  காஞ்சாம்புறம் பகுதியை சேர்ந்த 26 வயதான சுரேஷ்  என்பவர் வேலைவெட்டியில்லாமல் இருந்தார் .ஆனால் அவர் கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் தெரிந்தவர் .இதை அவர் நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தாமல் தீய விஷயங்களுக்கு பயன்படுத்தினார்  
அவர் அதே பகுதியில் வசிக்கும் இரண்டு இளம் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து போலி முகநூல் பக்கங்களில் பதிவு செய்தார் .அதை பார்த்து பாதிக்கப்பட்ட பெண்களின் உறவினர்கள் அங்குள்ள போலீசில் புகார் தந்தனர் .இதனால்  அந்த வாலிபர் சுரேஷை சைபர் க்ரைம் போலீசார் பிடித்து அவரின் ஊடக கணக்குகளை ஆராய்ந்தனர் .அப்போது அவரின் இந்த ஆபாச வேலைகள் அம்பலமானது .அதன் பிறகு சைபர் க்ரைம் போலீசார் அந்த போட்டோக்களை டெலிட் செய்தனர் 
பின்னர் அந்த சுரேஷை  குண்டர் சட்டத்தில் கைது செய்ய பொது மக்கள் மாவட்ட எஸ்.பி. மற்றும் மாவட்ட கலெக்டர்  ஆகியோருக்கு பரிந்துரை செய்தனர். அவர்களின் உத்தரவுபடி இன்று மாவட்ட சைபர் கிரைம் போலீசார் குற்றவாளியை குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளையம்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.